சென்னையில் கொரோனா பரவல் குறித்த விவரங்கள் – 3 லட்சம் பேர் பாதிப்பு!!
தமிழகத்தை பொறுத்தவரை அதிகபட்சமாக சென்னையில் கொரோனா அதிகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 6678 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை கொரோனா பரவல்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 24,800க்கு மேல் பதிவாகியுள்ளது. இதனால் பல கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகமுள்ள மாநிலத்தில் தமிழகமும் இடம் பிடித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சென்னை மாநகராட்சியில் கொரோனாவால் 6678 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று காலை நிலவரப்படி 33316 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாடு முழுவதும் 15 நாட்கள் முழு ஊரடங்கு – 1 லட்சம் இறப்புகள் தடுக்கப்படும்!
இது மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களில் 9 சதவிகிதமாகும். அதிகபட்சமாக அண்ணா நகரில் 3721 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தேனாம்பேட்டை, கோடம்பாக்கத்தில் பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில், தற்போது அம்பத்தூரில் பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை பின்வருமாறு,
- கொரோனா பாதிக்கப்பட்டவர்கள்: 3,70,596
- கொரோனாவில் இருந்து மீண்டவர்கள்: 3,32,259
- சிகிச்சையில் உள்ளவர்கள்: 33,316
- கொரோனாவால் உயிரிழந்தவர்கள்: 5,021
- நேற்று பரிசோதனை செய்தவர்கள்: 30,005