டாஸ்மாக் கடைகள் மூன்று நாட்களுக்கு மூடல்.. காரணம் இதுவா? வெளியான அறிவிப்பு!
கர்நாடகா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் காரணமாக வருகிற 8 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு மதுக்கடை மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
டாஸ்மாக் கடைகள்
கர்நாடகா மாநிலத்தில் வருகிற மே 10 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பல அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். மேலும் மாநிலம் முழுவதும் போலீசார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கர்நாடகா மாநிலத்தில் மே மாதம் 8 ஆம் தேதி உடன் பிரச்சாரம் முடிவடைகிறது.
தமிழக அரசு கல்லூரிகளில் மே – 8 முதல் மாணவர் சேர்க்கை துவக்கம் – உயர்கவித்துறை அறிவிப்பு!
அதன் பின் கர்நாடகாவில் 8 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை 3 நாட்கள் மது கடைகள் மூட தேர்தல் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் மாநில தேர்தல் அதிகாரிகள் தமிழகம் – கர்நாடகா எல்லை பகுதிகளில் இயங்கி வரும் மது கடைகளை மூட வேண்டும் என ஈரோடு மாவட்ட காவல் துறைக்கு கடிதம் அனுப்பி இருக்கின்றனர். அதனை தொடர்ந்து தமிழக- கர்நாடகா எல்லையான 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தாளவாடி பாரதி புரத்தில் இயங்கி வரும் தமிழக அரசின் டாஸ்டாக் மதுக்கடைகள் மூன்று நாட்கள் மூடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.