தமிழக அரசு கல்லூரிகளில் மே – 8 முதல் மாணவர் சேர்க்கை துவக்கம் – உயர்கவித்துறை அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2023-2024 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை மே -8ம் தேதி முதல் தொடங்க உள்ளது. மாணவர்கள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
மாணவர் சேர்க்கை:
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவுகள் வரும் 8-ம் தேதி வெளியாக உள்ளது. அதன் பிறகு மாணவர்கள் உயர் கல்வியில் சேர ஏதுவாக தமிழக அரசு மற்றும் கலை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கவுள்ளது.
தமிழக ரேஷன் கடையில் ‘கியூ ஆர் கோடு’ மூலமாக பண பரிவர்த்தனை – காஞ்சிபுரத்தில் துவக்கம்!
இது தொடர்பாக உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் இயங்கி வரும் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர மே – 8ம்தேதி முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் http://www.tngasa.in என்ற இணையதள முகவரி வாயிலாக மே – 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
மேலும் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க இயலாதவர்கள் கல்லூரி உதவி மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விண்ணப்ப நடைமுறைகள் குறித்த கூடுதல் விவரங்களுக்கு 1800 425 0110 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.