தமிழக அரசு கல்லூரிகளில் மே – 8 முதல் மாணவர் சேர்க்கை துவக்கம் – உயர்கவித்துறை அறிவிப்பு!

0
தமிழக அரசு கல்லூரிகளில் மே - 8 முதல் மாணவர் சேர்க்கை துவக்கம் - உயர்கவித்துறை அறிவிப்பு!
தமிழக அரசு கல்லூரிகளில் மே - 8 முதல் மாணவர் சேர்க்கை துவக்கம் - உயர்கவித்துறை அறிவிப்பு!
தமிழக அரசு கல்லூரிகளில் மே – 8 முதல் மாணவர் சேர்க்கை துவக்கம் – உயர்கவித்துறை அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2023-2024 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை மே -8ம் தேதி முதல் தொடங்க உள்ளது. மாணவர்கள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

மாணவர் சேர்க்கை:

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவுகள் வரும் 8-ம் தேதி வெளியாக உள்ளது. அதன் பிறகு மாணவர்கள் உயர் கல்வியில் சேர ஏதுவாக தமிழக அரசு மற்றும் கலை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கவுள்ளது.

தமிழக ரேஷன் கடையில் ‘கியூ ஆர் கோடு’ மூலமாக பண பரிவர்த்தனை – காஞ்சிபுரத்தில் துவக்கம்!

இது தொடர்பாக உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் இயங்கி வரும் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர மே – 8ம்தேதி முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் http://www.tngasa.in என்ற இணையதள முகவரி வாயிலாக மே – 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

மேலும் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க இயலாதவர்கள் கல்லூரி உதவி மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விண்ணப்ப நடைமுறைகள் குறித்த கூடுதல் விவரங்களுக்கு 1800 425 0110 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!