தமிழக ரேஷன் கடையில் ‘கியூ ஆர் கோடு’ மூலமாக பண பரிவர்த்தனை – காஞ்சிபுரத்தில் துவக்கம்!
தமிழக ரேஷன் கடைகளிலேயே முதன்முறையாக கியூ ஆர் கோடு மூலமாக பண பரிவர்த்தனை செய்யும் திட்டம் தற்போது முதன் முறையாக காஞ்சிபுரத்தில் துவங்கப்பட்டுள்ளது.
ரேஷன் கடை
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளின் வாயிலாக அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை முதலான அத்தியாவசிய பொருட்கள் பொதுமக்களுக்கு மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், பொது மக்களின் வசதிக்காக ரேஷன் கடையில் பல்வேறு மாற்றங்களும் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், ரேஷன் கடையில் கூடிய விரைவிலேயே மின்னணு பரிமாற்றம் மூலமாக பணமற்ற பரிவர்த்தனை நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
TNPSC குரூப் 1 தேர்வர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
அதாவது, பொதுமக்கள் தாங்கள் வாங்கும் பொருட்களுக்கு பணம் மூலமாக பரிவர்த்தனை செய்யாமல் தங்களது மொபைல் போன் மூலமாகவே ‘கியூ ஆர் கோடு’ மூலமாக எளிமையாக பண பரிவர்த்தனை செய்யும்படியான திட்டம் தற்போது முதன்முதலாக காஞ்சிபுரத்தில் உள்ள ரேஷன் கடையில் துவங்கப்பட்டுள்ளது. மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டுமே மொத்தமாக 602 கூட்டுறவு ரேஷன் கடைகள் உள்ளன. இந்நிலையில், தற்போது தமிழகத்திலேயே முதல் முறையாக காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு நிறுவனங்களிலும் இந்த மின்னணு பரிமாற்றும் முறை துவங்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download