TANGEDCO நிறுவனத்தின் கடன் சுமையால் எழுந்த புதிய சிக்கல் – மூன்றாக பிரிய வாய்ப்பு! அரசின் திட்டம்!
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கடன் சுமை அதிகரித்து உள்ளதால் தற்போது இதற்கான தீர்வாக புதிய ஆலோசனைகளை அரசு செயல்படுத்த உள்ளது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது.
Tangedco:
தமிழ்நாடு மின்சார வாரியம் 2010ம் ஆண்டு இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டது. தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் லிமிடெட் (Tangedco) மற்றும் தமிழ்நாடு மின் தொடர் அமைப்பு கழகம் (Tantransco) என்று இரண்டு கழகங்கள் உருவாக்கப்பட்டது. Tangedco மூலம் மின்னு உற்பத்திக்கான பணிகளும் Tantransco என்பதன் மூலம் மின் தொடரமைப்பு கட்டுமான மேம்படுத்தும் பணிகளும் செய்யப்பட்டு வருகின்றன.
Join Our WhatsApp Group” for Latest Updates
தற்போது மின்சார வாரியத்திற்கு ரூபாய் 1.6 லட்சம் கோடி அளவிற்கான கடன் உள்ளது. இந்நிலையில் Ernst & Young என்ற ஆலோசனை நிறுவனம் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் ஆலோசனைகளை வழங்கி உள்ளது. அதன்படி இந்நிறுவனம் மின்சார வாரியம் குறித்த அனைத்து தகவல்களையும் ஒருங்கிணைத்து இதற்கான விரிவான அறிக்கை ஒன்றை தயாரித்து அரசிடம் வழங்கியுள்ளது. அதன்படி Tangedcoவை உற்பத்தி, விநியோகம் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் என்ற மூன்று பிரிவுகளாக பிரித்து இதற்காக புதிய தலைவர்களை நியமித்து அதன் மூலம் நிர்வகிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
11ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – 2023 ‘முதலமைச்சர் திறனாய்வு தேர்வு’ ஒத்திவைப்பு!
மொத்த கடன் தொகையானது பிரிக்கப்பட்டால் கடன் சுமை குறையும் என்றும், குறைந்த வட்டிக்கு கடன் கிடைக்கும் என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்காக உரிய தலைவர்கள் நியமிக்கப்பட்டு சீராக பணிகள் செய்யப்படும் பட்சத்தில் அனைத்துவித நிதி சுமைகளும் சீரமைக்கப்பட்டு விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.