மத்திய அரசு ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் – ரூ.9,000 வரை சம்பள உயர்வு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த மாத இறுதிக்குள் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் எனவும், குறைந்தது ரூ.9,000 வரையிலும் சம்பள உயர்வு இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
சம்பள உயர்வு:
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஜனவரி மாதத்தில் ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்ட நிலையில் தற்போது ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வினை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.
Follow our Instagram for more Latest Updates
மேலும், இந்தியாவில் கடந்த இரண்டு மாதங்களாக பணவீக்கம் அதிகரித்திருக்கும் நிலையில் 3% மட்டுமே அகவிலைப்படி உயர்வு கிடைக்கும் என தகவல் வெளியாகி வருகிறது. ஆனால், தற்போது வரை மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி குறித்த எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. மேலும், இந்த மாதத்தில் கண்டிப்பாக அகவிலைப்படி உயர்த்தப்படலாம் என கூறப்படுகிறது.
TANGEDCO நிறுவனத்தின் கடன் சுமையால் எழுந்த புதிய சிக்கல் – மூன்றாக பிரிய வாய்ப்பு! அரசின் திட்டம்!
இந்நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத DA உயர்வு அமல்படுத்தப்பட்டால் டிஏ 45 சதவீதமாக இருக்கும். மேலும், 4% DA உயர்வு வழங்கப்பட்டால் ஊழியர்களுக்கு 46%த்தின் அடிப்படையில் சம்பள உயர்வு கிடைக்கும். ஆனால், கட்டாயமாக மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தது ரூ.9,000 வரை சம்பளம் உயர்வு இருக்கும் என கூறப்படுகிறது.