தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் – இன்று (செப் 12) இறுதிகட்ட ஆலோசனை!

0
தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் - இன்று (செப் 12) இறுதிகட்ட ஆலோசனை!
தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் - இன்று (செப் 12) இறுதிகட்ட ஆலோசனை!
தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் – இன்று (செப் 12) இறுதிகட்ட ஆலோசனை!

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்.15 ஆம் தேதி முதல் தொடங்க இருக்கும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று (செப்.12) இறுதி ஆலோசனை நடத்த இருக்கிறார்.

உரிமைத்தொகை திட்டம்

தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வருகிற செப். 15 ஆம் தேதி முதல் முதல்வர் ஸ்டாலின் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இந்த திட்டம் மூலம் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும். அந்த வகையில் இந்த திட்டத்திற்கு அரசு ரூ.7 கோடி நிதி ஒதுக்கி இருக்கிறது. இந்த திட்டம் சரியாக செயல்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

விண்ணப்பித்த பெண்களில் தகுதி உடையவர்களை தேர்வு செய்து இறுதி பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. அதில் 1 கோடியே 6 லட்சம் பேருக்கு உரிமைத்தொகை வழங்கப்பட இருக்கிறது. இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று (செப்.12) இறுதி கட்ட ஆலோசனை நடத்த இருக்கிறார். இதில் மகளிர் உரிமை தொகை திட்டத்தை செயல்படுத்தும் நடைமுறை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!