டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!!
சென்னையில் ஏப்ரல் 25 மற்றும் மே 1 ஆம் தேதிகளில் TASMAC மதுபான கடைகளுக்கு விடுமுறை வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே கொரோனா காரணமாக நேர கட்டுப்பாடுகள் அறிவித்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மதுபான கடைகளுக்கு விடுமுறை:
மகாவீரர் ஜெயந்தி தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அரசு விடுமுறையாக கருதப்படுகிறது. எனவே சென்னை பகுதியில் உள்ள மதுபான கடைகள், மதுபான சில்லறை விற்பனை கடைகள், அதனை சார்ந்த பார்கள், கிளப்புகளை சார்ந்த பார்கள், ஹோட்டல்களை சார்ந்த பார்கள் போன்றவை செயல்பட அனுமதி இல்லை.
TN Job “FB Group” Join Now
இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட செய்தி குறிப்பில், “ஏப்ரல் 25 மற்றும் மே 1 ஆம் தேதி முறையே மகாவீரர் ஜெயந்தி மற்றும் மே தினம் காரணமாக மதுபான கடைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அன்றைய தினங்களில் மதுபான விற்பனை செய்யக்கூடாது. அதனை மீறி செயல்படுவார்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூலை மாதம் நடைபெறும் – அரசு வட்டாரங்கள் தகவல்!!
மே மாதம் 2 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கை என்பதால் மதுபான கடைகள் விடுமுறை என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. ஏற்கனவே கொரோனா இரண்டாம் தாக்கம் காரணமாக மதுபான கடைகளில் நேர குறைப்பு அறிவித்தது குறிப்பிடத்தக்கதாகும்.