தமிழகத்தில் 9,10,11 வகுப்பு மாணவர்களுக்கு ஆல்பாஸ் உத்தரவு ரத்தா ? – உயர்நீதிமன்றம் உத்தரவு

0
தமிழகத்தில் 9,10,11 வகுப்பு மாணவர்களுக்கு ஆல்பாஸ் உத்தரவு ரத்தா ? - உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் 9,10,11 வகுப்பு மாணவர்களுக்கு ஆல்பாஸ் உத்தரவு ரத்தா ? - உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் 9,10,11 வகுப்பு மாணவர்களுக்கு ஆல்பாஸ் உத்தரவு ரத்தா ? – உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் கொரோனா காரணமாக 9,10,11 ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் அறிவிப்பை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்றம் உத்தரவு:

தமிழகத்தில் கொரோனா தாக்கம் காரணமாக பள்ளிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. மாணவர்களுக்கு 10 மாதங்களாக நேரடி வகுப்புகள் நடத்தப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டன. இந்நிலையில் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வந்ததால் 10,12 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் ஜனவரி மாதம் 19 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டன. அதன் பின்னர் 9,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டன.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் குறைந்த கால இடைவெளியில் பள்ளிகள் திறக்கப்பட்டதால் 9,10,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படாமல் தேர்ச்சி வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த அறிவிப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நந்தகோபால் என்பவர் மனு தாக்கல் செய்தார். அதில் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக தேர்வுகள் நடத்தப்பட முடியாத நிலை, எனவே தேர்ச்சி அறிவித்தது ஏற்புடையது. ஆனால் இந்த ஆண்டு பள்ளிகளும் திறக்கப்படாமல் தேர்ச்சி வழங்குவதால் மாணவர்களுக்கு உயர்கல்வி படிப்பது பெரும் சிரமம் ஆகும்.

தமிழகத்தில் கல்வி தொலைக்காட்சி வகுப்புகள் அதிகரிப்பு – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!!

அடிப்படை கல்வி அறிவு இல்லாமல் உயர்கல்வி பயில மாணவர்கள் செல்வதால் அவர்களின் கற்றல் திறன் பெரிதும் பாதிக்கப்படும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுருந்தார். மேலும் அரசு இதுகுறித்து உரிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படாமல் தேர்ச்சி வழங்கியதாக தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்கள் ஆல்பாஸ் – துணை முதல்வர் திட்டம் !!

இந்நிலையில் இதுகுறித்து விசாரித்த அமர்வு நீதிபதிகள், ஆல் பாஸ் தொடர்பாக அரசு உரிய அதிகாரிகளுடன் ஆலோசனை வழங்கப்பட வில்லை என்பது ஏற்புடையதல்ல, பொதுநல விஷயங்களில் அதிகாரிகளின் ஆலோசனைக்கு பிறகே அரசு முடிவெடுக்க முடியும் எனவும், 11 ஆம் வகுப்பு மாணவர்களின் தகுதியை அறிய அந்தந்த பள்ளிகளிலே பொதுத்தேர்வு நடத்தலாம் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!