தமிழகத்தில் கல்வி தொலைக்காட்சி வகுப்புகள் அதிகரிப்பு – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!!
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பள்ளிகளுக்கு காலவரையின்றி விடுமுறை வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிகள் விடுமுறை என்றாலும் கல்வி தொலைக்காட்சி மூலமாக பாடங்கள் நடத்தப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை:
தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. 10 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டன. ஆன்லைன் வசதி இல்லாத அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டன. இந்நிலையில் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வந்ததால் 10,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு காரணமாக பள்ளிகள் ஜனவரி மாதம் 19 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டன.
TN Job “FB Group” Join Now
அதனை தொடர்ந்து 9,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டன. இந்நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. சில மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் கொரோனா தாக்கம் அதிகமாக பரவி வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தமிழக அரசு அனைத்து பள்ளிகளும் 12 ஆம் வகுப்பு மாணவர்களை தவிர அனைத்து வகுப்பிற்கு மறு உத்தரவு வரும் வரை விடுமுறை வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் கல்வி தொலைக்காட்சி மூலமாக பாடங்கள் நடத்தப்பட வேண்டும் எனவும், இதற்கான நிகழ்ச்சிகளை அதிகப்படுத்தபட வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் 9,10,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மீதமுள்ள பாடங்களை நடத்தி முடிக்கப்பட வேண்டும் என அனைத்து ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.