தமிழகத்தில் விரைவில் பள்ளிகள் திறப்பு.. அதிகரிக்கும் ஸ்டேஷனரி பொருள்கள் விலை – வெளியான தகவல்!
தமிழகத்தில் இன்னும் 5 நாட்களில் பள்ளிகள் திறக்கப்பட இருக்கும் நிலையில் நோட்டு புத்தகங்களின் விலை கடந்த ஆண்டை விட 10சதவீதம் அதிகரித்து இருக்கிறது.
விலை ஏற்றம்
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் மீண்டும் ஜூன் 7 ஆம் தேதி தொடங்கப்பட இருக்கிறது. இந்நிலையில் பல பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வேகமாக நடந்து வருகிறது. மேலும் அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள் வழங்க ஏற்பாடு நடந்து வருகிறது. மேலும் கடைகளில் பள்ளிகள் திறப்பதை முன்னிட்டு நோட்டுகள், கையேடுகள், எழுத தேவையான பொருள்கள், பேக், டிப்பன் பாக்ஸ் போன்றவை விற்பனை அதிகமாகி இருக்கிறது. அதனால் கடந்த ஆண்டை விட இதன் விற்பனை 10 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.
அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4% உயர்வு – 7வது ஊதியக்குழு தகவல்!
அந்த வகையில் 400 பக்கம் கொண்ட ‘லாங் சைஸ்’ நோட்டு புத்தகம் 200 ரூபாயில் இருந்து ரூ.225க்கும், மற்ற நோட்டுகளின் விலையும் 10 சதவீதம் உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்து வியாபாரிகள் கூறுகையில் கடந்த 2 ஆண்டுகளாக 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கையேடு நூல்கள் விலை அதிகரித்துள்ளது. இப்போது உரைநடை பாட புத்தகத்தின் விலை 500 ரூபாய்யை நெருங்கி இருக்கிறது என தெரிவித்துள்ளார்.