தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று (நவ.11) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை – கனமழை எதிரொலி!
வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி உள்ள நிலையில் தமிழகத்தில் இன்று (நவ.11) 13 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை:
தமிழகத்தில் கடந்த ஒரு வாரம் முழுவதும் பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் கடந்த 2 நாட்களாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி உள்ள நிலையில் டெல்டா மாவட்டங்கள் முழுக்க பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பல சாலைகள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
ஹேமாவை வைத்து மிரட்டும் கண்ணம்மா, கண்ணம்மாவை தவறாக பேசும் பாரதி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!
அரசு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து உதவிகளை செய்து வருகிறது. மழை காலம் முடியும் வரை அம்மா உணவகத்தில் இலவச சாப்பாடு வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், சேலம், விழுப்புரம், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து அதிகாரபூர்வமாக விலகிய பரினா – உறுதி செய்த துணை நடிகை!
அதே போல சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து அவர்களது உடைமைகள் நாசமாயின. தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்கள் தொடர்ந்து பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளன.