கண்ணனிற்கு பணத்தை கொடுத்து உதவி செய்த கதிர், கதிர் மாற்றமாக இருப்பதை உணர்ந்த முல்லை – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கண்ணன் பணத்தை காணவில்லை என ரோட்டில் நிற்க கதிர் அவருக்கு உதவி செய்கிறார். பின் கதிர் வித்தியாசமாக நடந்து கொள்வதை பார்த்து முல்லை சந்தேகபடுகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கதிர் கட்டிட வேலை செய்பவருக்கு பணம் கொடுக்க காத்திருக்க அவர் வாங்க வரவில்லை. அந்த நேரம் பார்த்து கண்ணன் ஐஸ்வர்யா ரோட்டில் பணம் இல்லாமல் இருக்க கதிர் சென்று இப்படியே எப்படி இருப்பீங்க என கேட்கிறார். பணம் இல்லை என்றால் வீட்டில் வந்து சண்டை போடுவேன் என மீனாவின் அப்பா சொன்னதாக சொல்கிறார். உடனே கதிர் பணத்தை கொடுத்து கொண்டு போய் கொடு என கதிர் சொல்கிறார்.
கண்ணன் வேறு வழி இல்லாமல் இருக்கிறார். பணத்தை கொண்டு சென்று மீனாவின் அப்பாவிடம் கொடுக்கிறார். இது உங்களது பணம் இல்லை நாங்க உங்களது பணத்தை எடுக்கவும் இல்லை. ஆனால் நாங்க திருடியதாக சொன்னது தவறு என ஐஸ்வர்யா பேசுகிறார். உன்னிடம் தான் சாவி இருந்தது அப்போ யாரு எடுத்திருப்பா என ஜனார்த்தனன் பேச இப்போ கூட என்னால் போலீஸ் ஸ்டேஷன் போக முடியும் ஆனால் என் அண்ணியின் அப்பா என்ற காரணத்தால் பொறுமையாக இருக்கிறேன் என கண்ணன் சொல்கிறார்.
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று (நவ.11) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை – கனமழை எதிரொலி!
பின் கதிர் வீட்டிற்கு வர அண்ணன் பணத்தை கேட்டால் என்ன சொல்வது என தெரியாமல் பதட்டத்தில் இருக்கிறார். மூர்த்தி என்ன நடந்தது என கேட்க, கதிர் வேலை செய்த அசதி என சொல்கிறார். கட்டிட வேலை செய்பவருக்கு காசு கொடுத்துட்டியா என மூர்த்தி கேட்க கதிர் என்ன சொல்வது என தெரியாமல் இருக்கிறார். முல்லை எதோ தவறாக இருப்பதை உணர்கிறார். கதிர் பணத்தை கொடுத்ததாக பொய் சொல்ல, பின் பக்கம் வந்து முல்லை என்ன நடந்தது என கேட்கிறார். கதிர் விவரத்தை சொல்ல, கண்ணன் பணம் இல்லாமல் என்ன செய்வான் என கேட்கிறார்.
ஹேமாவை வைத்து மிரட்டும் கண்ணம்மா, கண்ணம்மாவை தவறாக பேசும் பாரதி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!
அதான் பணத்தை கொடுத்துவிட்டேன் என கதிர் சொல்ல முல்லை அதிர்ச்சி அடைகிறார். அப்போ மூர்த்தி மாமா விடம் பொய் சொன்னீங்களா என கேட்க, மறுபடியும் போஸ்டர் ஒட்டும் வேலை செய்ய இருக்கீங்களா என கேட்கிறார். பின் மீனா வாசலில் இருக்க, ஐஸ்வர்யா வாசலில் அமர்ந்து பேசுகிறார். நீங்க மட்டும் தான் இந்த வீட்டில் மிகவும் நல்லவர் என ஐஸ்வர்யா சொல்ல, மீனா அப்பா செய்ததை சொல்ல, ஐஸ்வர்யா முயற்சி செய்கிறார். உடனே கண்ணன் அவரை தடுக்கிறார். அடுத்து வாழ்க்கையில் என்ன செய்ய போகிறோம் எப்படி வேலை தேட போகிறோம் இந்த வீட்டிற்கு வாடகை வேற அதிகம் என சொல்லி புலம்புகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.