டெல்லி முதல்வருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் – முதல்வர் பதவியில் ஈடுபட தடை!

0
டெல்லி முதல்வருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் - முதல்வர் பதவியில் ஈடுபட தடை!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜாமீன்:

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊழல் வழக்கு ஒன்றில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு டெல்லி மாநில அமலாக்கத்துறை காவலில் வைக்கப்பட்டிருந்தார். கைது செய்யப்பட்ட அவர் சிறையில் இருந்தே முதல்வர் பணியை மேற்கொண்டு வந்தார். உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்த நிலையில் இடைக்கால ஜாமீன் வழங்கக் கூடாது என அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

நெருங்கியாச்சு TNPSC குரூப் 4 தேர்வு – பாஸ் ஆக இது தான் முக்கியமே!

இந்நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கர் தத்தா ஆகியோர் இன்று இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளார். இதில் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவதற்காக ஜூன் 1-ம் தேதி வரை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது என்றும் ஜூன் 2ம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் பதவியில் ஈடுபடக்கூடாது என்றும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!