ஹேமாவை வைத்து மிரட்டும் கண்ணம்மா, கண்ணம்மாவை தவறாக பேசும் பாரதி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

0
ஹேமாவை வைத்து மிரட்டும் கண்ணம்மா, கண்ணம்மாவை தவறாக பேசும் பாரதி - இன்றைய
ஹேமாவை வைத்து மிரட்டும் கண்ணம்மா, கண்ணம்மாவை தவறாக பேசும் பாரதி - இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!
ஹேமாவை வைத்து மிரட்டும் கண்ணம்மா, கண்ணம்மாவை தவறாக பேசும் பாரதி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மா சௌந்தர்யாவிடம் பாரதி விவாகரத்து வாங்கினால் ஹேமாவை இந்த வீட்டில் இருக்கவிடமாட்டேன் என சொல்கிறார். பின் கண்ணம்மா வக்கீலை சந்தித்து பேசுகிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாரதி விவாகரத்து நோட்டீஸ் அனுப்ப கண்ணம்மா சௌந்தர்யாவிடம் பேச வருகிறார். சௌந்தர்யா நான் இந்த விவகாரத்தில் உதவி செய்ய கூடாது என சத்தியம் வாங்கிவிட்டேன் என சொல்ல, உடனே கண்ணம்மா உங்க புள்ள விவாகரத்து வாங்கினால் ஹேமாவை இந்த வீட்டில் இருக்க விடமாட்டேன். எந்த கோட்டிற்கு சென்றாலும் கூட பரவாயில்லை நான் கட்டாயம் ஹேமாவை கூட்டிக் கொண்டு போவேன் என கண்ணம்மா சொல்கிறார்.

தடுப்பூசி செலுத்தா விட்டால் சிலிண்டர், ரேஷன் கிடையாது – ஷாக் அறிவிப்பு!

பின் பாரதி ரூமில் இருந்து வெளியே வர ரூம் வெளி பக்கம் பூட்டி இருப்பதை பார்த்து கோபப்படுகிறார். அப்போது சௌந்தர்யா அந்த பக்கம் வர பாரதி கதவை தட்டுகிறார். சௌந்தர்யா திறந்ததும் யாரு என்னை மூடினார் என பாரதி கேட்கிறார். யாரோ தெரியாமல் மூடி இருப்பார்கள் என சௌந்தர்யா சமாளிக்க பாரதி அந்த கண்ணம்மா வந்தாளா என கோவமாக கேட்கிறார். ஆமாம் கண்ணம்மா வந்தால் இப்போ அதற்கு என்ன என சௌந்தர்யா கேட்க, என்ன விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிவிட்டேன் என அழுது புலம்பினால என பாரதி கேட்கிறார்.

சௌந்தர்யா அவள் எதற்கு அழ வேண்டும் அவ சும்மா இருப்பாள் மட்டும் என சொல்லாத என சொல்கிறார். அஞ்சல் அகில் ஏன் பாரதி இப்படி திடீரென நடந்து கொள்கிறார் என தெரியாமல் இருக்கிறார். கண்ணம்மா தான் பாவம் அவள் சின்ன வயதில் இருந்து யாரிடமும் பாசம் கிடைக்காமல் வளர்ந்தாள் என சொல்ல, அகில் உன் அப்பாவிற்கு போன் செய்து பேசு என சொல்கிறார். அஞ்சலி கண்ணம்மா அப்பாவிற்கு போன் செய்து நடந்ததை சொல்கிறார்.

பாரதியால் தற்கொலைக்கு முயற்சிக்கும் கண்ணம்மா? சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்! ரசிகர்கள் ஷாக்!

கண்ணம்மாவின் அப்பா சௌந்தர்யாவை பார்க்க வருகிறார். என்ன நடந்தது என தெரியாமல் குழப்பத்தில் வந்திருக்கேன். பணக்காரர் படித்தவர் என திருமணம் செய்து கொடுத்துவிட்டு இப்படி கஷ்டப்படுகிறாள் என அப்பா சொல்ல, இதையெல்லாம் கல்யாணம் முடிந்த புதுசில் சொல்லிருந்தால் நான் நம்பிருப்பேன் ஆனால் இப்போது என்ன நடக்கிறது என தெரியவில்லை. நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்டுக்கொள்கிறேன் இப்படி ஒரு புள்ளையை பெற்றதற்கு நான் மிகவும் வருத்தப்படுகிறேன் என சௌந்தர்யா சொல்கிறார். நீங்க சொன்ன கேட்பார் என கண்ணம்மாவின் அப்பா சொல்ல, அந்த பாரதி எல்லாம் இப்படி இல்லை என சௌந்தர்யா சொல்கிறார்.

நீங்க நினைத்தால் எதாவது செய்யலாம் என கண்ணம்மாவின் அப்பா கெஞ்ச, ஐயோ என்னால் எதுவும் செய்ய முடியாது பாரதி என்னிடம் சத்தியம் வாங்கிவிட்டான். அதை மீறினால் உயிரை விட்டுவிடுவேன் என சொன்னதை சொல்கிறார். நீங்களே எங்க கையை விட்டுவிட்டால் நாங்க என்ன செய்வது என சௌந்தர்யாவிடம் கேட்கிறார். சௌந்தர்யா கண்ணம்மா தலையெழுத்துப்படி தான் எல்லாம் நடக்கும் என சொல்லி கிளம்ப சொல்கிறார். கண்ணம்மாவிற்கு எந்த நல்லதும் நடக்கவில்லை என நினைத்து கண்ணம்மா அப்பா வருத்தப்படுகிறார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!