கோபியை வெறுக்கும் ராதிகா, குழப்பத்தில் இருக்கும் கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
கோபியை வெறுக்கும் ராதிகா, குழப்பத்தில் இருக்கும் கோபி - இன்றைய
கோபியை வெறுக்கும் ராதிகா, குழப்பத்தில் இருக்கும் கோபி - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
கோபியை வெறுக்கும் ராதிகா, குழப்பத்தில் இருக்கும் கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், ராதிகா கோபி மீது கோவமாக இருக்க, அந்த நேரம் பார்த்து கோபி வருகிறார். ராதிகா கோபியிடம் பேசுவதை தவிர்க்க என்ன நடந்தது என தெரியாமல் கோபி இருக்கிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், ஜெனிக்கு செழியன் பரிசு அனுப்ப ஜோசப் இனிமேல் அவனுடன் சேர கூடாது என கண்டிக்கிறார். ராதிகா திருமண நிகழ்ச்சியில் நடந்ததை நினைத்து வருத்தமாக இருக்கிறார். அப்போது ராதிகாவின் அம்மா நான் பேசியதில் கோவமாக இருக்கியா என கேட்க ராதிகா அதெல்லாம் ஒன்றுமில்லை. நான் வேறு ஒரு பிரச்சனையில் இருக்கிறேன் என சொல்கிறார். அந்த நேரம் பார்த்து கோபி வர ராதிகா கோபியிடம் பேசாமல் இருக்கிறார். கோபியை பார்த்து மயூரா சந்தோசமாக இருக்க ராதிகா ஏன் ஒரு மாதிரி இருக்க என கோபி கேட்கிறார்.

கண்ணனிற்கு பணத்தை கொடுத்து உதவி செய்த கதிர், கதிர் மாற்றமாக இருப்பதை உணர்ந்த முல்லை – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

ராதிகா உங்களிடம் பேச நான் யாரு என கேட்க, கோபி என்ன நடந்தது என ராதிகாவை தொட போகிறார். உடனே கோபி வருத்தமாக கிளம்ப, கோபி வீட்டிற்கு வந்து போன் செய்து கொண்டே இருக்கிறார். ஆனால் ராதிகா போனை எடுக்கவில்லை. என்ன நடந்திருக்கும் என கோபி குழப்பத்தில் இருக்க, ராதிகாவின் அம்மா பேச கூடாது என சொல்லிருப்பாரோ என கேட்கிறார். அப்படி எல்லாம் சொல்லிருந்தாலும் கேட்க மாட்டாரே என கோபி நினைக்க, அந்த நேரம் பார்த்து பாக்கியா வருகிறார்.

பாக்கியா ஏன் டென்ஷனாக இருக்கீங்க என கேட்க, கோபி என் நண்பர் என்னுடன் பேசாமல் இருக்கிறார். அதற்கான காரணம் தான் தெரியவில்லை என குழப்பத்தில் இருக்கிறார். பாக்கியா என்ன பிரச்சனை என சொல்லிருக்கலாம் அல்லவா என கேட்க, நீங்க என் நம்பரில் இருந்து போன் செய்து பாருங்க என போனை கொடுக்கிறார். கோபியும் தெரியாமல் போனை வாங்கி பண்ண, அப்பறம் தான் பாக்கியா நம்பர் தெரியும் என்பதை உணருகிறார்.

ஹேமாவை வைத்து மிரட்டும் கண்ணம்மா, கண்ணம்மாவை தவறாக பேசும் பாரதி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

பின் போனை கட் செய்ய ராதிகா டீச்சர் போன் செய்கிறார் என எடுத்து பேச வருகிறார்.பின் ராதிகா பாக்கியாவிற்கு போன் செய்து போன் வந்தது என சொல்கிறார். தெரியாமல் வந்திருக்கும் என சொல்ல ராதிகா போனை வைக்கிறார். அமிர்தா எழிலிற்கு போன் செய்ய வெய்யில் இருந்து போன் செய்ததால் உடம்பு அசதியாக இருக்கிறது என சொல்கிறார். அமிர்தா எழிலிற்கு பல அறிவுரைகளை சொல்கிறார். அப்போது எழில் அமிர்தா வைத்திருக்கும் அக்கறையை நினைத்து சந்தோசமாக இருக்கிறார்.

அமிர்தா பிறந்தநாள் அன்று அவருக்கு பரிசு கொடுத்து உங்களை மிகவும் பிடித்திருக்கு என எழில் சொல்கிறார். அப்போது அது எல்லாம் கனவு என தெரியவருகிறது. எழில் அமிர்தா பற்றியே நினைத்துக் கொண்டிருக்க பிறந்தநாள் சும்மா இருக்க கூடாது. என்னுடைய காதலை வேற சொல்ல வேண்டும் என யோசித்துக் கொண்டிருக்க,அப்போது பாக்கியா வருகிறார். என்ன யோசித்துக் கொண்டிருக்க என கேட்க, அதெல்லாம் ஒன்றுமில்லை என எழில் சொல்கிறார். உனக்கு கொடுத்த பரிசுகளில் பிடித்தது என்ன என எழில் கேட்க, பாக்கியா யாரையாவது காதலிக்கிறாயா என கேட்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!