தமிழக பள்ளிகளில் அதிகரிக்கும் மாணவர் வருகைப்பதிவு – ஆசிரியர் சங்கம் தகவல்!!
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களின் வருகைப்பதிவு அதிகரிக்க தொடங்கி உள்ளதாக ஆசிரியர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பெற்றோர்களுக்கு நம்பிக்கை அதிகரித்து தங்களது குழந்தைகளை பள்ளிக்கு தயங்காமல் அனுப்ப தொடங்கி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மாணவர் வருகைப்பதிவு:
தமிழகத்தில் 10 மாதங்களுக்கு பின்னர் கடந்த ஜனவரி 19ம் தேதி 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கின. மாணவர்களின் வருகை கட்டாயம் இல்லை எனவும், விருப்பமுள்ளவர்கள் மட்டுமே பள்ளிக்கு வரலாம் என அரசு அறிவித்து இருந்தது. இந்நிலையில் ஆரம்பத்தில் மாணவர்களின் வருகை அதிகமாக இருந்த நிலையில், நாட்கள் செல்லச்செல்ல வருகை குறைய தொடங்கியது. மேலும் சில மாவட்டங்களில் ஆசிரியர், மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட காரணத்தால் பெற்றோர்கள் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப தயங்கினர்.
தமிழகத்தில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் பிப்.13க்குள் நிரப்பப்படும் – அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி!!
தற்போது தொற்று பாதிப்பு குறைந்துள்ளதால் அதிகப்படியான 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் வருகை புரிய தொடங்கி உள்ளனர். தற்போது வருகைப்பதிவு 90 சதவீதம் அதிகரித்து உள்ளது. ஜனவரி 19 முதல் 23 வரை அரசு பள்ளி மாணவர்களில் சுமார் 65% மட்டுமே நேரடி வகுப்புகளில் கலந்து கொண்டுள்ளனர். அதே நேரத்தில் பல தனியார் பள்ளிகள் 75% வருகையை பதிவு செய்துள்ளன.
தமிழக கல்லூரி மாணவர்களுக்கு 2 ஜிபி இலவச டேட்டா திட்டம் – முதல்வர் துவக்கி வைப்பு!!
தெற்கு மாவட்டங்களில் வருகைப்பதிவு 90% ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் சங்கத் தலைவர் கூறுகையில், இப்போது வரும் நாட்களில் நகர்ப்புற பகுதி பள்ளிகளில் 100% வருகை இருக்கும் என தெரிவித்துள்ளார். 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அளிக்கப்படும் இலவச மதிய உணவு திட்டம் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் நீட்டிக்கப்படும், இது அரசு பள்ளிகளில் வருகையை அதிகரிக்கும். மேலும் பல தனியார் பள்ளிகள் 95% க்கும் அதிகமான வருகையைப் பதிவு செய்துள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்