தமிழக கல்லூரி மாணவர்களுக்கு 2 ஜிபி இலவச டேட்டா திட்டம் – முதல்வர் துவக்கி வைப்பு!!
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி மாணவர்களுக்கு தினசரி 2 ஜிபி இலவச டேட்டா வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று துவக்கி வைத்துள்ளார். இதன் மூலம் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்கள் அதிகளவில் பயன்பெறுவர்.
இலவச டேட்டா திட்டம்:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த வருட மார்ச் மாதத்தில் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் இறுதியாண்டு தவிர்த்து பிற மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. போதிய இணைய வசதி இல்லாத காரணத்தால் அரசு கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள முடியாத சூழல் நிலவியது. இதனை சரி செய்யும் பொருட்டு முதல்வர் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
தமிழகத்தில் பிப்ரவரி 8 முதல் அனைத்து கல்லூரிகளும் திறப்பு – அரசு உத்தரவு!!
அதன்படி தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு தினசரி 2 ஜிபி டேட்டா என 3 மாதங்களுக்கு தொடர்ச்சியாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் கல்லூரி மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இத்திட்டம் இன்று முதல்வர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் புதிய தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு திட்டத்தை துவக்கி வைத்தனர்.
கல்லூரிகளில் 4775 தற்காலிக ஊழியர்களுக்கு 3 ஆண்டுகள் பணி நீட்டிப்பு – உயர்கல்வித்துறை சுற்றறிக்கை!!
இதன் மூலம் 9,69,047 கல்லூரி மாணவர்களுக்கு பிப்ரவரி முதல் 3 மாதங்களுக்கு தினசரி 2 ஜிபி டேட்டா கார்டு இலவசமாக வழங்கப்பட உள்ளது. எல்காட் நிறுவனம் மூலம் கார்டுகள் விநியோகம் செய்யப்படுகின்றன.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்