12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பட்டியல் – அரசு தேர்வுகள் இயக்கம் அறிவிப்பு!!
2020-21 ஆம் ஆண்டுக்கான 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கும் பணிக்கு அனுமதி வழங்கியுள்ளதாகவும், அதனை பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரபூர்வ இணைதளம் மூலமாக பதிவு செய்ய அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அரசுத் தேர்வுகள் இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர்.
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பட்டியல்:
தமிழகத்தில் கடந்த 10 மாதங்களாக மூடப்பட்ட பள்ளிகள் பொதுத்தேர்வு நெருங்கி வருவதால் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் கடந்த 19 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டன. இந்நிலையில் மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். அரசும் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் சுமையை குறைக்க பல நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
பிப்ரவரி 1 பள்ளிகள் திறப்பு, மே 17 பொதுத்தேர்வு – மாநில அரசு திட்டம்!!
இந்நிலையில் தமிழக அரசு தேர்வுகள் இயக்குனர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளவை, “2020-21 ஆம் ஆண்டிற்கான பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியல் தயார் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடத்தப்பட்ட முதல்நிலை பொதுத்தேர்வு பட்டியலை அடிப்படையாக கொண்டு இந்த ஆண்டுக்கான மேல்நிலை இரண்டாம் நிலை பொதுத்தேர்வு பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும்.
தமிழகத்தில் பள்ளிகள் திறந்த 5 நாளில் 6 பேருக்கு கொரோனா – பெற்றோர்கள் அதிர்ச்சி!!
மேலும் அனைத்து மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களும் 27.01.2021 பிற்பகல் முதல் 01.02.2021 வரை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களுக்கு கொடுக்கப்பட்ட username மற்றும் password பயன்படுத்தி மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நிரந்தரப் பதிவெண், பெயர், பிறந்த தேதி, பாடத்தொகுதி உள்ளிட்ட விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த வழிமுறைகளை முதன்மை கல்வி அலுவலர், அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்த வேண்டும்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Not a bad very good to hear