தமிழகத்தில் பள்ளிகள் திறந்த 5 நாளில் 6 பேருக்கு கொரோனா – பெற்றோர்கள் அதிர்ச்சி!!

0
தமிழகத்தில் பள்ளிகள் திறந்த 5 நாளில் 6 பேருக்கு கொரோனா - பெற்றோர்கள் அதிர்ச்சி!!
தமிழகத்தில் பள்ளிகள் திறந்த 5 நாளில் 6 பேருக்கு கொரோனா - பெற்றோர்கள் அதிர்ச்சி!!
தமிழகத்தில் பள்ளிகள் திறந்த 5 நாளில் 6 பேருக்கு கொரோனா – பெற்றோர்கள் அதிர்ச்சி!!

தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு மத்தியில் கடந்த ஜனவரி 19ம் தேதி 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கியது. இந்நிலையில் மாணவர்கள், ஆசிரியர்கள் என 6 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா தொற்று:

தமிழகம் முழுவதும் கடந்த வருடம் மார்ச் மாத இறுதியில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்த காரணத்தால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக கல்வி தொலைக்காட்சி, ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டு வந்தன. பின்னர் தேர்வு நடத்த முடியாத சூழல் நிலவியதால் ஆண்டு இறுதித்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

பிப்ரவரி 1 பள்ளிகள் திறப்பு, மே 17 பொதுத்தேர்வு – மாநில அரசு திட்டம்!!

பல்வேறு ஆலோசனைகளுக்கு பின்னர் பொதுத்தேர்வு எழுத உள்ள 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் கடந்த ஜனவரி 19ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அதில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளி வளாகத்தில் பின்பற்ற வேண்டிய கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டு பின்பற்றப்படுகிறது. இந்நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்ட கடந்த 5 நாட்களில் மட்டும் 6 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜூன் 17 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – UK பிரதமர் அறிவிப்பு!!

சேலம் மாவட்டத்தில் ஒரு ஆசிரியர், மாணவர், திண்டுக்கலில் ஒரு ஆசிரியர் மற்றும் சென்னையில் 3 ஆசிரியர்கள் என 6 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த பள்ளிகள் மூடப்பட்டு சுகாதார பணியாளர்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்றது. மேலும் தொற்று உறுதியானவர்களுடன் தொடர்பில் இருந்த ஆசிரியர்கள், மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். எனவே பள்ளிகளில் சுழற்சி முறை வகுப்புகள், சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!