தமிழகத்தில் 2023-24 ஆம் கல்வியாண்டிற்கான இலவச மாணவர் சேர்க்கை – ஏப்ரல் முதல் விண்ணப்ப பதிவு!
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வரும் நிலையில், 2023-24 ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் ஏப்ரல் மாதம் முதல் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது
மாணவர் சேர்க்கை
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009ம் படி, சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய, வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குழந்தைகள் 25 சதவிகித இடங்களில் சேர 2003 ஆம் ஆண்டு அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் முழுவதும் உள்ள 8 ஆயிரத்துக்கும் அதிகமான தனியார் பள்ளிகளில் சுமார் ஒரு லட்சம் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.
உங்களது ரேஷன் கார்டு தொலைந்து விட்டதா? அப்போ உடனே இதை பண்ணுங்க.. முழு விவரம் இதோ!
இந்நிலையில் 2023-24 ஆம் கல்வியாண்டில் இலவச மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் அனைத்து பள்ளிகளிலும் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பதிவு இணைய வழியில் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும், இதற்கான பணியினை ஏப்ரல் மாதம் முதல் செய்ய இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் இந்த திட்டத்தில் மாணவர்கள் சேர சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வருமானவரி சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை பெற்றோர்கள் முன்னதாக தயாராக வைத்திருக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி இருக்கிறது.
Exams Daily Mobile App Download