உங்களது ரேஷன் கார்டு தொலைந்து விட்டதா? அப்போ உடனே இதை பண்ணுங்க.. முழு விவரம் இதோ!
தமிழகத்தில் ரேஷன் கார்டு முக்கிய அடையாள ஆவணமாகவும் இருப்பிட சான்றாகவும் விளங்கி வருகிறது. இத்தகைய கார்டு திடீரென தொலைந்து விட்டால் என்ன செய்வது என்பது குறித்து இப்பதிவில் காண்போம்.
ரேஷன் கார்டு:
தமிழ்நாடு பொது விநியோக திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்கள் ரேஷன் அட்டைகளை பெற்று அதன் வாயிலாக மலிவு விலையில் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை பெற்று பயனடைந்து வருகின்றனர். மளிகை பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமல்ல தற்போது ரேஷன் கார்டு அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கும் பயன்படுகிறது.
மதுரையில் கொட்டித்தீர்த்து வரும் கனமழை – வெப்பம் தணிந்ததால் மகிழ்ச்சியில் மக்கள்!
அதுமட்டுமல்ல மக்களின் இருப்பிட சான்றாகவும், அடையாள ஆவணங்களில் ஒன்றாகவும் கருத்தில் கொள்ளப்பட்டு வருகிறது. அதனால் ரேஷன் கார்டு இல்லாதவர்கள் புதிய கார்டுக்கு ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்து வருகின்றனர். இத்தகைய முக்கிய ஆவணமான ரேஷன் கார்டு எதிர்பாராத விதமாக தொலைந்து விட்டால் இனி கவலைப்பட தேவையில்லை.
Follow our Instagram for more Latest Updates
அரசின் https://www.tnpds.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக எளிதாக விண்ணப்பித்து புதிய ரேஷன் கார்டு பெறலாம். புதிய ரேஷன் கார்டு தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 1800 425 5901 என்ற உதவி எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download