பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு பதிலாக ரொக்கப் பணம் – மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு!!
பொது இடங்களில் கிடக்கும் பிளாஸ்டிக் பாட்டில்களை சேமித்துக் கொடுப்பவர்களுக்கு ரொக்கப் பணம் பரிசாக வழங்கப்படும் என நெல்லை மாநகராட்சி ஆணையர் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
பரிசு அறிவிப்பு
இன்றைய கால கட்டத்தில் சுற்றுச்சூழல் மாசுபாடு என்பது மனித குலத்திற்கே பேராபத்தாக மாறி இருக்கிறது. அந்த வகையில், பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் ஆபத்து குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கடும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில், பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது மற்றும் நீரை பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் விதமாக திருநெல்வேலி மாநகராட்சி சிறந்த முயற்சி ஒன்றை முன்னெடுத்துள்ளது.
Follow our Instagram for more Latest Updates
தமிழகத்தில் 2023-24 ஆம் கல்வியாண்டிற்கான இலவச மாணவர் சேர்க்கை – ஏப்ரல் முதல் விண்ணப்ப பதிவு!
அந்த வகையில், பொது இடங்களில் உள்ள பிளாஸ்டிக் பாட்டில்களை சேமித்து வழங்குபவர்களுக்கு ரொக்கப் பணம் வழங்கப்படும் என திருநெல்வேலி மாநகராட்சி அறிவித்துள்ளது. அதன்படி, சோதனை முயற்சியாக திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் வசிப்பவர்கள் காலி பிளாஸ்டிக் பாட்டில்களை கொடுத்து ஒவ்வொரு பாட்டிலுக்கும் ரூ.1 பணமாக பெறலாம் என திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.