தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்காதவர்களுக்கு வாய்ப்பு – அமைச்சர் முக்கிய தகவல்!
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற இதுவரை விண்ணப்பிக்காதவர்களும் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அமைச்சர் அறிவிப்பு
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற 1.70 பேர் விண்ணப்பித்துள்ளனர். ஆனால் அதில் 1.06 பேருக்கு மட்டுமே தகுதி அடிப்படையில் உரிமைத்தொகையான ரூ.1000 வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களில் தகுதி இருந்தும் உரிமைத்தொகை வழங்கப்படாதவர்களுக்கு மீண்டும் மேல்முறையீடு செய்ய அரசு தரப்பில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
RITES நிறுவனத்தில் Site Engineer வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க || நேர்காணல் மட்டுமே!
அதில் பலர் விண்ணப்பித்து வரும் நிலையில், அவர்களில் தகுதியானவர்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற தகுதி இருந்தும், விண்ணப்பிக்காதவர்களுக்கு மீண்டும் மறுவாய்ப்பு வழங்கப்படும் எனவும், அதற்கான அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும். என சட்டப்பேரவையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.