ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் 90 ஆசிரியர் பணியிடங்கள் – தொடக்கக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை!!

0
ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் 90 ஆசிரியர் பணியிடங்கள் - தொடக்கக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை!!
ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் 90 ஆசிரியர் பணியிடங்கள் - தொடக்கக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை!!
ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் 90 ஆசிரியர் பணியிடங்கள் – தொடக்கக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை!!

தமிழகத்தில் 2020-21 ஆம் கல்வியாண்டில் புதிதாக 25 தொடக்கப் பள்ளிகள் துவங்குதல் மற்றும் 10 ஊராட்சி ஒன்றிய / நகராட்சி தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. மேலும் அதில் ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான தொடக்கக்கல்வி இயக்குனரின் சுற்றறிக்கையும் வெளியாகி உள்ளது.

பள்ளிகள் தரம் உயர்த்தல்:

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கடந்த வருடம் மார்ச் மாதம் வெளியிட்ட அறிவிப்பில், தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் 5 கோடியே 75 லட்ச ரூபாய் செலவில் 25 புதிய அரசு தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்படும். மேலும் 10 அரசு தொடக்கப் பள்ளிகள் 3 கோடியே 90 லட்ச ரூபாய் செலவில் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். இந்த பள்ளிகளுக்கு தேவைப்படும் 3 கூடுதல் வகுப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டு, தேவையான ஆசிரியர் பணியிடங்கள் பணி நிரவல் மூலம் நிரப்பப்படும் என தெரிவித்து இருந்தார்.

முதுகலை படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு – அண்ணா பல்கலை அறிவிப்பு!!

அதன்படி புதிதாக துவங்கப்பட உள்ள 25 புதிய ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளுக்கு தலா 1 தலைமை ஆசிரியர், 1 இடைநிலை ஆசிரியர் என மொத்தம் 25 தலைமை ஆசிரியர் மற்றும் 25 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் தொடக்கக்கல்வி இயக்குனரின் பொதுத்தொகுப்பு உபரி பணியிடங்களில் இருந்து நிரப்பிக் கொள்ளலாம் என அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியாகி உள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு 4 நாட்கள் ‘பொங்கல் விடுமுறை’ – கல்வித்துறை அறிவிப்பு!!

மேலும் தரம் உயர்த்தப்படும் 10 ஊராட்சி ஒன்றிய / நகராட்சி நடுநிலைப் பள்ளிகளுக்கு, பள்ளி ஒன்றிற்கு ஒரு தலைமை ஆசிரியர் மற்றும் 3 பட்டதாரி ஆசிரியர் வீதம் 10 தலைமை ஆசிரியர் மற்றும் 30 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை இயக்குனரின் பொதுத்தொகுப்பு உபரி பணியிடங்களில் இருந்து நிரப்பிக் கொள்ள அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் ஜனவரி 19 முதல் பள்ளிகள் திறப்பு – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!!

அதுமட்டுமின்றி பாடவாரியாக சுழற்சி முறையில், 2020-21ம் கல்வியாண்டில் முதல் பட்டதாரி ஆசிரியர் பணியிடமும், அடுத்தடுத்த 2021-22, 2022-23 கல்வியாண்டுகளில் தலா ஒரு பட்டதாரி ஆசிரியர் பணியிடமும் நிரப்பப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!