தமிழகத்தில் ஜனவரி 19 முதல் பள்ளிகள் திறப்பு – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 9 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டு இருந்த பள்ளிகள் வரும் ஜனவரி 19ம் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் திறக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார்.
பள்ளிகள் திறப்பு:
கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த வருடம் மார்ச் 25ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. பின்னர் நோய் பரவல் குறைந்த காரணத்தால் மாநில அரசுகள் கல்வி நிறுவனங்களை திறப்பது குறித்து தன்னிச்சையாக முடிவெடுத்துக் கொள்ள அனுமதி வழங்கிய மத்திய அரசு, அதன் பின்னர் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டு உள்ளது.
பிப்ரவரி 1 ‘மத்திய பட்ஜெட்’ தாக்கல் – ஆவணங்கள் அச்சிடுதல் கிடையாது! வரலாற்றில் முதல்முறை!!
தமிழகத்தில் இது தொடர்பாக முதலாவதாக நடத்தப்பட்ட கருத்துகேட்பு கூட்டத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் அந்த முடிவு நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி வாயிலாக பாடங்களை கற்று வருகின்றனர். மேலும் நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வுகள் கண்டிப்பாக நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்து இருந்தார்.
மாணவர்கள் நேரடி வகுப்புகள் இன்றி பொதுத்தேர்வில் கலந்து கொள்வது கடினம். இதனால் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறந்து வகுப்புகளை தொடங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இது தொடர்பாக கருத்துகேட்பு கூட்டம் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், வரும் ஜனவரி 19ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்து உள்ளார்.
பொங்கல் பரிசு ரூ.2500 ஜனவரி 25ம் தேதி வரை வழங்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு!!
இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. தமிழக அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய்த் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் தான் நோய் தொற்று படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.
28.12.2020 அன்று நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையிலும், மூத்த அமைச்சர்களுடன் கலந்தாலோசித்தும், பொங்கல் விடுமுறைக்குப் பின்னர் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் 2021 ஜனவரி 6 முதல் 8 வரை கருத்து கோரப்பட்டது. இக்கூட்டங்களில் கலந்து கொண்ட பெரும்பான்மையான பெற்றோர்கள், பள்ளிகளைத் திறக்க தங்கள் இசைவினை அளித்துள்ளதாக 95 சதவீத பள்ளிகள் அறிக்கை அளித்துள்ளதை கருத்தில் கொண்டும், கல்வி பயில்வதில் மாணாக்கர்களின் வருங்கால நலனை கருத்தில் கொண்டும், வரும் 19.1.2021ம் தேதி முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும்.
பிப்ரவரி 1 முதல் பள்ளிகள் திறப்பு – மாநில முதல்வர் அறிவிப்பு!!
பள்ளிகள் திறக்கப்படும்போது, ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்களுக்கு மிகாமல் செயல்படவும், அரசு வெளியிடும் வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உட்பட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. அவ்வாறு பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கான விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகின்றது. அனைத்து மாணவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஏதுவாக, வைட்டமின் மற்றும் துத்தநாக மாத்திரைகள் வழங்க சுகாதாரத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணாக்கர்களின் நலன் கருதி, அரசு எடுத்து வரும் கோவிட் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பெற்றோர்களும், ஆசிரியர்களும் மற்றும் மாணவர்களும் முழு ஒத்துழைப்பினை நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்