பிப்ரவரி 1 முதல் பள்ளிகள் திறப்பு – மாநில முதல்வர் அறிவிப்பு!!
தெலுங்கானா மாநிலத்தில் பள்ளிகள் வருகிற பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை திறக்கப்படவுள்ளன. இந்நிலையில் பள்ளிகள் திறக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அம்மாநில முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
பள்ளிகள் திறப்பு:
உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா காரணமாக அனைத்து மாநிலத்திலும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மத்திய அரசும், பள்ளிகள் திறப்பது குறித்து மாநில அரசுகள் முடிவெடுத்துக் கொள்ள அனுமதி வழங்கி உள்ளது. கொரோனா குறைந்து வரும் நிலையில் சில மாநில அரசுகள் பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை தொடங்கியுள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை பொங்கல் பண்டிகைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் அதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை.
இலவச டேட்டா பள்ளி மாணவர்களுக்கு வழங்காதது ஏன்? தமிழக அரசிடம் கேள்வி!!
இந்நிலையில் தற்போது தெலுங்கானா மாநிலத்தில் வருகிற பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார். மாநிலத்தில் கோவிட் -19 தடுப்பூசி உடனடியாக வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய அதிகாரிகளை அறிவுறித்தியுள்ளார். மேலும் நோய் கட்டுப்பாட்டுக்கு தேவையான மருத்துவ உதவிகள், அவசர கால ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் வைக்க உத்தரவிட்டார்.
இராணுவ ஆட்சேர்ப்பு முகாமில் இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
இது குறித்து மேலும் பேசிய அவர் கூறியதாவது, “வருவாய்த் துறை தொடர்பான அனைத்து பிரச்சினைகளையும் விரைவாக தீர்க்குமாறு அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். அந்தந்த துறைகளில் உள்ள அனைத்து பதவி உயர்வுகளையும் உடனடியாக முடித்து, காலியாக உள்ள அனைத்து பதவிகளையும் ஒரே நேரத்தில் நிரப்புமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது”, இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்