பிப்ரவரி 1 மத்திய பட்ஜெட் தாக்கல் – ஆவணங்கள் அச்சிடுதல் கிடையாது!! வரலாற்றில் முதல்முறை!!
கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறையைத் தொடர்ந்து இந்த ஆண்டு மத்திய பட்ஜெட் ஆவணங்கள் அச்சிடப்படாது எனவும், அதற்கு பதிலாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு (எம்.பி.க்கள்) மின்னணு முறையில் பட்ஜெட் விநியோகம் செய்யப்படும் என மத்திய நிதி அமைச்சகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
மத்திய பட்ஜெட்:
நவம்பர் 26, 1947 அன்று சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் முதன் முறையாக மத்திய அரசின் வருமானம் மற்றும் செலவு அறிக்கை மற்றும் நிதி மசோதாவுடன் கூடிய ஆவணங்கள், புதிய வரி மற்றும் புதிய நிதியாண்டுக்கான பிற நடவடிக்கைகளை விவரிக்கும் ஆவணங்கள் அச்சிடப்படாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா பரவல் காரணமாக, ஏப்ரல் முதல் (FY 2021-22) நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் தொடர்பான ஆவணங்களை அச்சிட வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அரியர் தேர்வு அட்டவணையை தாக்கல் செய்ய வேண்டும் – பல்கலைக்கு ஐகோர்ட் உத்தரவு!!
சுதந்திர இந்திய வரலாற்றில் முதல் தடவையாக 7.7 சதவீத பொருளாதார சரிவிற்கு பின்னர் 22வது நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. எனவே, அனைத்து பங்குதாரர்களுக்கும் வரவிருக்கும் வரவுசெலவுத் திட்டத்தில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது, இது தொற்றுநோயால் நலிவடைந்த பொருளாதாரத்தின் வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது.
பொங்கல் பரிசு ரூ.2500 ஜனவரி 25ம் தேதி வரை வழங்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு!!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசாங்கத்தின் எட்டாவது பட்ஜெட்டான 2021-22க்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1, 2021 அன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது மூன்றாவது முழுநேர பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். மேலும் பாரம்பரியமாக பட்ஜெட் பிரிண்ட் செய்வதற்கு முன்னர் பின்பற்றப்படும் ‘அல்வா’ கிண்டி வழங்கும் நிகழ்ச்சியும் இம்முறை நடைபெறாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்