அரியர் தேர்வு அட்டவணையை தாக்கல் செய்ய வேண்டும் – பல்கலைக்கு ஐகோர்ட் உத்தரவு!!

0
அரியர் தேர்வு அட்டவணையை தாக்கல் செய்ய வேண்டும் - பல்கலைக்கு ஐகோர்ட் உத்தரவு!!
அரியர் தேர்வு அட்டவணையை தாக்கல் செய்ய வேண்டும் - பல்கலைக்கு ஐகோர்ட் உத்தரவு!!
அரியர் தேர்வு அட்டவணையை தாக்கல் செய்ய வேண்டும் – பல்கலைக்கு ஐகோர்ட் உத்தரவு!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் அரியர் தேர்வு அட்டவணையை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. அரியர் தேர்வு ரத்தினை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

அரியர் தேர்வுகள்:

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் கல்லூரி, பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டன. இதனால் இறுதியாண்டு தவிர அனைத்து மாணவர்களுக்கும் செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. மேலும் அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்தி உள்ள மாணவர்களுக்கும் தேர்வெழுதுவதில் இருந்து விலக்கு அளித்து தேர்ச்சி அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் லட்சக்கணக்கான அரியர் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த உத்தரவு கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கல்லூரி மாணவர்களுக்கு மாதந்தோறும் 60 ஜிபி இலவச டேட்டா கார்டு – முதல்வர் அறிவிப்பு!!

இந்த உத்தரவினை எதிர்த்து அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி மற்றும் வழக்கறிஞர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் யுஜிசி விதிகளுக்கு முரணாக அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாகவும், ஆன்லைன் அல்லது ஆப்லைன் முறையில் கண்டிப்பாக அரியர் தேர்வுகளை நடத்த வேண்டும் என AICTE விளக்கம் அளித்த நிலையில், தேர்வுகளை நடத்துமாறு பல்கலைக்கழகங்களுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

தமிழகத்தில் ஜனவரி மாதத்திற்குள் பள்ளிகளை திறக்காவிடில் ஆர்ப்பாட்டம் – தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு!!

அதனை தொடர்ந்து அண்ணா பல்கலை, சென்னை பல்கலை என பல்வேறு பல்கலைக்கழகங்கள் சார்பில் அரியர் தேர்வுகள் குறித்த தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு ஆன்லைன் முறையில் நடத்தப்பட திட்டமிடப்பட்டு உள்ளது. இன்று இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில் தமிழகத்தில் செயல்படும் அனைத்து பல்கலைக்கழகங்களும் அரியர் தேர்வு அட்டவணையை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.

பள்ளிகள் திறப்பிற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் – மத்திய கல்வி அமைச்சகம் வெளியீடு!!

ஆன்லைன் அல்லது ஆப்லைன் என ஏதேனும் ஒரு முறையின் மூலம் அரியர் தேர்வுகள் நடத்துவது தொடர்பான அட்டவணையை வரும் பிபரவரி 4ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதனால் அரியர் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!