பொங்கல் பரிசு ரூ.2500 ஜனவரி 25ம் தேதி வரை வழங்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு!!

0
பொங்கல் பரிசு ரூ.2500 ஜனவரி 25ம் தேதி வரை வழங்கப்படும் - தமிழக அரசு அறிவிப்பு!!
பொங்கல் பரிசு ரூ.2500 ஜனவரி 25ம் தேதி வரை வழங்கப்படும் - தமிழக அரசு அறிவிப்பு!!
பொங்கல் பரிசு ரூ.2500 ஜனவரி 25ம் தேதி வரை வழங்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு!!

தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் ரூ.2500 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு ஜனவரி 25ம் தேதி வரை வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களும் பொங்கல் பரிசினை பெறும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

பொங்கல் பரிசு:

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஆரம்பத்தில் பொது முடக்கம் கடுமையாக பின்பற்றப்பட்டதால் தொழில்துறைகள் முடங்கி பெரும் இழப்பை சந்தித்தன. இதனால் பலர் வேலையிழந்து உரிய வருமானம் இன்றி தவித்தனர். இதன் காரணமாக ஊரடங்கு காலத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச அத்தியாவசிய பொருட்கள் மட்டுமின்றி ரூ.1000 ரொக்கத் தொகையும் அரசு சார்பில் வழங்கப்பட்டது.

பிப்ரவரி 1 முதல் பள்ளிகள் திறப்பு – மாநில முதல்வர் அறிவிப்பு!!

தற்போது ஊரடங்கில் ஏகப்பட்ட தளர்வுகள் வழங்கப்பட்டு இயல்பு நிலை திரும்பி வருகிறது. மேலும் பொங்கல் பண்டிகை நெருங்கி உள்ளது. தமிழக அரசு சார்பில் வருடந்தோறும் ரூ.1000 ரொக்கம் மற்றும் மளிகைப் பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு வழங்கப்படுவது வழக்கம். இந்த முறை கொரோனா பரவலால் நலிவடைந்த பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு, பொங்கல் பரிசுத்தொகையை உயர்த்தி வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் திட்டமிட்டார்.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது?? ஜனவரி 12ம் தேதிக்குள் முக்கிய அறிவிப்பு!!

அதன்படி ரூ.2500 ரொக்கம், முழு கரும்பு மற்றும் மளிகைப் பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு குறிப்பிட்ட நேரத்தில் பொங்கல் பரிசினை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. கடந்த ஜனவரி 4ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

அரியர் தேர்வு அட்டவணையை தாக்கல் செய்ய வேண்டும் – பல்கலைக்கு ஐகோர்ட் உத்தரவு!!

பொங்கல் பரிசு விநியோகம் ஜனவரி 12ம் தேதிக்குள் முடிக்கப்பட உத்தரவிடப்பட்டு இருந்தது. பின்னர் பொங்கல் விடுமுறை முடிந்து பரிசினை பெற முடியாதவர்களுக்கு ஜனவரி 13ம் தேத்தி பெற்றுக் கொள்ளலாம் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு அறிவித்து இருந்தார். தற்போது வெளியான உத்தரவின்படி, பொதுமக்கள் யாருக்கும் தவறாமல் பொங்கல் பரிசு கிடைக்க வேண்டும் என்பதற்காக ஜனவரி 25ம் தேதி வரை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!