பள்ளி மாணவர்களுக்கு 4 நாட்கள் ‘பொங்கல் விடுமுறை’ – கல்வித்துறை அறிவிப்பு!!

0
பள்ளி மாணவர்களுக்கு 4 நாட்கள் பொங்கல் விடுமுறை - கல்வித்துறை அறிவிப்பு!!
பள்ளி மாணவர்களுக்கு 4 நாட்கள் பொங்கல் விடுமுறை - கல்வித்துறை அறிவிப்பு!!
பள்ளி மாணவர்களுக்கு 4 நாட்கள் பொங்கல் விடுமுறை – கல்வித்துறை அறிவிப்பு!!

பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதை ஒட்டி புதுச்சேரியில் நாளை முதல் நான்கு நாட்களுக்கு பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பொங்கல் விடுமுறை:

ஏறக்குறைய 9 மாத இடைவெளிக்குப் பிறகு, புதுச்சேரியில் உள்ள பள்ளிகள் 2021 ஜனவரி 4 ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட்டன. தேர்வுகளுக்கு முன்னதாக வழக்கமான, தனிப்பட்ட வகுப்புகளை மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டு கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளும் பின்பற்றப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து மாணவர்கள் தங்கள் வகுப்பறைக்குத் திரும்பியதால் பலூன்கள் மற்றும் இனிப்புகள் வழங்கி ஆசிரியர்கள் வரவேற்றது உற்சாகத்தை ஏற்படுத்தியது.

தமிழகத்தில் ஜனவரி 19 முதல் பள்ளிகள் திறப்பு – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!!

கொரோனா தொற்று பரவல் காரணமாக மார்ச் 2020 முதல், புதுச்சேரி முழுவதும் உள்ள பள்ளிகள் கடந்த 9 மாதங்களாக மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் எடுக்கப்பட்டது. COVID-19 முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்கள் மற்றும் நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி பள்ளிகளை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதனால் பல்வேறு மாநிலங்கள் பள்ளிகளை ஜனவரி மாதத்தில் இருந்து திறப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தன.

தமிழக பள்ளிகளில் தொழிற்கல்வி பாடங்கள் கட்டாயமாக்கப்பட வேண்டும் – ஆசிரியர்கள் கழகம் மனு!!

இப்போதைக்கு, மாணவர்களுக்கு தொற்றுநோய் ஆபத்தை குறைக்க பள்ளிகள் திட்டமிடப்பட்ட சில மணிநேரங்களுக்கு மட்டுமே நடத்தப்படுகின்றன, அதாவது காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை. மேலும் ஜனவரி 18 முதல் பள்ளிகள் முழு நாள் செயல்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தவிர, பள்ளிக்கு வருகை தரும் மாணவர்களும், ஆசிரியர்களும் கட்டாயமாக முகக்கவசங்களை அணிந்து கொள்வதோடு, சமூக இடைவெளியை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

‘குவாண்டம் மெக்கானிக்ஸ்’ இலவச ஆன்லைன் படிப்பு – ஐஐடி பாம்பே அறிவிப்பு!!

புதுச்சேரியின் பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையில், “பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13 முதல் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளையும் 4 நாட்களுக்கு மூட வேண்டும்” என உத்தரவிடப்பட்டு உள்ளது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!