தமிழக பள்ளிகளில் தொழிற்கல்வி பாடங்கள் கட்டாயமாக்கப்பட வேண்டும் – ஆசிரியர்கள் கழகம் மனு!!
தமிழகத்தில் உள்ள மேல்நிலை பள்ளிகளில் கட்டாயம் தொழிற்கல்வி பாடங்கள் மாணவர்கள் பயில வேண்டும். அத்துடன் இரு தொழிற்கல்வி பாடங்களை மாணவர்கள் கற்க வழிவகை செய்ய வேண்டும், என தமிழக மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தொழிற்கல்வி பாடங்கள் கட்டாயம்:
தமிழக மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் சார்பில் அனைத்து மேல்நிலைப்பள்ளிகளிலும் தொழிற்கல்வி பாடத்தை கட்டாயம் ஆக்குவது குறித்து மனு ஒன்றை தமிழக அரசிடம் சமர்ப்பித்தனர். அதன்படி தமிழக அரசிடம் வழங்கப்பட்ட மனு குறித்து கழகத்தின் மாநிலத் தலைவர் செ.நா.ஜனார்த்தனன் வெளியிட்ட அறிக்கையில், “அனைத்து பாடங்களிலும் முதுகலை பயின்றுள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படுவது போல மேல்நிலை தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்க வேண்டும். பணியில் இருக்கும் தொழிற்கல்வி ஆசிரியர்கள் பணி ஓய்வு பெற்றால் தொழிற்கல்வி பாடம் மூடப்படும் நிலைமை தடுக்கப்பட வேண்டும்.
இராணுவ ஆட்சேர்ப்பு முகாமில் இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
2018-2019-ஆம் ஆண்டு கல்வி திட்டத்தின்படி 67 மேல்நிலை பள்ளிகளில் தொழிற்கல்வி பாடத்தை அறிமுகம் செய்ய அரசு உத்தரவிட்டது. ஆனால் தமிழகத்தில் உள்ள அனைத்து மேல்நிலை பள்ளிகளிலும் இந்த பாடத்தை அறிமுகம் செய்ய வேண்டும். அதற்கு முதலில் தமிழகத்தில் காலியாக உள்ள 600 காலியிடங்களை நிரப்ப வேண்டும். மேலும் கடந்த 10 ஆண்டுகளாக பெற்றோர்-ஆசிரியர் கழகத்தால் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களை பணிவரன்முறை செய்ய வேண்டும்.
தமிழகத்தில் ஜனவரி 19 முதல் பள்ளிகள் திறப்பு – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!!
மாணவர்கள் மத்தியில் தொழிற்கல்வி மேலும் வளர்ச்சி பெற இரண்டு பாடங்களை மாணவர்கள் பயில வழிவகை செய்ய வேண்டும். மேலும் தொழிற்கல்வி பாடங்கள் மாணவர்களுக்கு கட்டாயம் ஆக்கப்பட வேண்டும்”, இவ்வாறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை கழகம் சார்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர், செயலாளர் மற்றும் அமைச்சர் ஆகியோரிடம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்