தமிழகத்தில் ஜூன் 4 வரை 2,200 கூடுதல் பேருந்துகள் இயக்கம் – பள்ளிகள் திறப்பு எதிரொலி!

0
தமிழகத்தில் ஜூன் 4 வரை 2,200 கூடுதல் பேருந்துகள் இயக்கம் - பள்ளிகள் திறப்பு எதிரொலி!
தமிழகத்தில் ஜூன் 4 வரை 2,200 கூடுதல் பேருந்துகள் இயக்கம் - பள்ளிகள் திறப்பு எதிரொலி!
தமிழகத்தில் ஜூன் 4 வரை 2,200 கூடுதல் பேருந்துகள் இயக்கம் – பள்ளிகள் திறப்பு எதிரொலி!

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் அடுத்த வாரம் திறக்கப்பட இருக்கும் நிலையில் மக்களின் வசதிக்காக முக்கிய இடங்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.

கூடுதல் பேருந்துகள்

தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பின் படி அனைத்து பள்ளிகளும் ஜூன் 7 ஆம் தேதி திறக்கப்பட இருக்கின்றன. இந்நிலையில் கோடை விடுமுறையை கழிக்க வெளி ஊர் சென்ற மக்கள் மீண்டும் ஊருக்கு இந்த வார இறுதியில் திட்டமிடுவார்கள். அதனால் இந்த வார இறுதி நாட்களில் மக்கள் கூட்டம் பேருந்துகளில் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் வார இறுதி நாட்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஐஸ்வர்யா வளைகாப்பால் புதிய சண்டை… வீட்டிற்குள் வந்ததும் அடுத்த பஞ்சாயத்து – சீரியல் அப்டேட்!

அதன் படி சென்னைக்கு 900 பேருந்துகளும், கோவை, திருநெல்வேலி, மதுரை, சேலம், திருச்சி ஆகிய நகரங்களுக்கு 1,300 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 2,200 பேருந்துகள் இயக்க திட்டமிட்டுள்ளன. மேலும் மதுரை மற்றும் திருச்சியிலிருந்து முன்பதிவு செய்யாத பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சிறப்பு பேருந்துகள் நேற்று (ஜூன் 2) முதல் நாளை (ஜூன் 4) வரை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!