ஒடிஷா ரயில் விபத்து – முதல்வர் இழப்பீடு அறிவிப்பு! முழுவீச்சில் மீட்புப்பணி! கள நிலவரம் என்ன?
பெங்களூரு- ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த நிலையில் விபத்தில் சிக்கியது. அது குறித்த முழு விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
விபத்து சம்பவம்:
ஒடிசாவில் பெங்களூரு- ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த நிலையில், பாலசோர் மாவட்டத்தில் பஹனகா பஜார் ரயில் நிலையம் அருகே நேற்று (ஜூன் 2) இரவு 7 மணி அளவில் 2 பெட்டிகள் திடீரென தடம் புரண்டது. அது அருகே இருந்த தண்டவாளம் மீது விழுந்தது. இந்த விபத்து நடந்து சிறிது நேரத்தில் அந்த வழியாக கொல்கத்தா ஷாலிமாரில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் வேகமாக வந்தது. அது எதிர்பாராத விதமாக தண்டவாளத்தில் இருந்த பெங்களூரு ஹவுரா ரயிலின் பெட்டிகள் மீது மோதியது.
தமிழகத்தில் ஜூன் 4 வரை 2,200 கூடுதல் பேருந்துகள் இயக்கம் – பள்ளிகள் திறப்பு எதிரொலி!
விபத்து நடந்ததும் 7 பெட்டிகள் கவிழ்ந்தன. ஒரு சில பெட்டிகள் மூன்றாவது தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியது. இந்த கோர விபத்தில் சிக்கி, 233 பயணிகள் உயிரிழந்தனர். மேலும் 900 பயணிகள் படுகாயமடைந்தனர். அதில் தமிழகத்தை சேர்ந்த 35 பேர் உயிரிழந்து இருக்கின்றனர். இந்நிலையில் ரயில் விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உறவினர்களுக்கு ஒடிசா செல்ல சிறப்பு ரயில் இயக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும் சென்னை சென்றால் ரயில் நிலையத்தில் இருந்து இன்று (ஜூன் 3) மாலை 6.30 மணியளவில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ரயிலில் பயணம் செய்ய உதவி சேவை மையத்தை தொடர்பு கொண்டு சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் ரயில் விபத்தில் உயிரிழந்த தமிழர்கள் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் எனவும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
Join Our WhatsApp Group” for Latest Updates
Follow our Instagram for more Latest Updates