தமிழகத்தில் வெள்ள நிவாரண நிதிக்கான டோக்கன் – தலைமை செயலாளர் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் வெள்ள நிவாரண நிதி வழங்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், டோக்கன் கிடைக்காதவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார்.
டோக்கன்
தமிழகத்தில் கடந்த டிச. 4 ஆம் தேதி மிக்ஜாம் புயல் தாக்கியது. அதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பலர் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமாக ரூ. 6000 வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். தற்போது வெள்ள நிவாரண நிதி வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. வெள்ள நிவாரண நிதி காலை, 9:00 மணி முதல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை – மாவட்ட நிர்வாகங்கள் உத்தரவு!
ஆனால் சில இடங்களில் 1200 முதல் 1500 ரேஷன் கார்டுகள் உள்ள ரேஷன் கடைகள் இருக்கின்றன. இங்கு வெள்ள நிவாரணம் வழங்கும் பணிகள் சற்று தாமதமாகிறது. அதே நேரம் டோக்கன் வழங்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் கிடைக்கும் என தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர் இந்த பணிகளில் பகுதி நேர ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட இருப்பதாக தெரிவித்தார். அதே போல நிவாரண நிதி டோக்கன் கிடைக்காதவர்கள் விண்ணப்பிக்கவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், அதனால் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.