தமிழகத்தில் 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை – மாவட்ட நிர்வாகங்கள் உத்தரவு!
தமிழகத்தில் நேற்று முதல் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் இன்று (டிச. 18) 8 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
விடுமுறை அறிவிப்பு
தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. அது மட்டுமில்லாமல் தென் மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தேனி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் இன்று காலை நல்ல மழை பெய்தது. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மீண்டும் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு – பள்ளிகல்வித்துறை அறிவிப்பு!!
அதன்படி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், ராமநாதபுரம், தேனி, சிவகங்கை, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச. 18) விடுமுறை என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.