தமிழகத்தில் 2 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கல்வி தொலைக்காட்சி பாடங்கள்!!
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில் ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் படி மாணவர்களின் ஆன்லைன் பயிற்சிக்கான புதிய கால அட்டவணை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஆன்லைன் பயிற்சி:
கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. அதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாதவாறு ஆன்லைன் வழியாக கற்பித்தல் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி வழியாகவும் படங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
மே 14 மாலை 6 மணி முதல் முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!!
அந்த வகையில் மாணவர்களிடம் ஏற்பட்டுள்ள கற்றல் திறனை அறிந்து கொள்ளும் வகையில், பிரிட்ஜ் கோர்ஸ் மற்றும் ஒர்க் புக் பயிற்சி புத்தக கையேடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. தற்போது மாணவர்களுக்கான பிரிட்ஜ் கோர்ஸ் பாடங்கள் சம்பந்தமான வீடியோக்கள், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி முதல் மே 10 வரை கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இந்நிலையில் இரண்டு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான பயிற்சி புத்தகத்தில் உள்ள பாடங்கள் காணொளிகளாக தற்போது தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த காணொளிகள் கல்வி தொலைக்காட்சியில் மே 11 (இன்று) முதல் மே 18 ஆம் தேதி வரை ஒளிப்பரப்பாக உள்ளது. அதனால் இந்த தகவலை தொடக்க, நடுநிலை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.