மே 14 மாலை 6 மணி முதல் முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!!
நாகலாந்து மாநிலத்தில் கொரோனா பரவல் காரணமாக வரும் மே 14ம் தேதி மாலை 6 மணி முதல் முழு ஊரடங்கு, உயர்மட்ட குழுவின் ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் அமல்படுத்தப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
முழு ஊரடங்கு:
நாகலாந்து மாநிலத்தில் நேற்றைய நிலவரப்படி, புதிதாக 133 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து இதுவரை 16,283 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 10 உயிரிழப்புகள் ஏற்பட்டதால் மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்ந்துள்ளது. கோஹிமா மற்றும் திமாபூர் மாவட்டங்களில் கோவிட் -19 தொற்றின் பாதிப்பு அதிகரிக்கும் காரணத்தால் முழு ஊரடங்கு ஒன்று தான் சிறந்த வழி என்று NPF அறிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
இதனால் வரும் மே 14ம் தேதி அன்று உயர்மட்ட குழுவினர் ஆலோசனைக் கூட்டம் நடத்திய பிறகு, கடைபிடிக்க வேண்டிய நிலையான பாதுகாப்பு செயல்முறைகளும், பின்னர் மே 14 மாலை 6 மணி முதல் மே 21ம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க இருக்கிறோம் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.
ஊரடங்கு காலத்தில் உள்ள விதிவிலக்குகள்:
- விவசாய நடவடிக்கைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் முழு ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
- ஊரடங்கின் போது அரசாங்கத் துறைகளும், துறைத் தலைவர்களின் முக்கிய குழுவுடன் தொடர்ந்து செயல்படும்.
- கட்டுமான நடவடிக்கைகள் அனுமதிக்கப்படலாம், ஆனால் தொழிலாளர்களுக்கான அனைத்து SOP களையும் கடைபிடிப்பதை உறுதி செய்வதற்கு ஒப்பந்தக்காரர் மற்றும் நிறுவனங்கள் பொறுப்பாகும்.
- ஊரடங்கு காலத்தில், சுகாதாரத்துறை ஆய்வகங்களில் முழு வேகத்தில் கோவிட் -19 சோதனைகளை மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.