தமிழக பல்கலைக்கழக தேர்வில் பழைய வினாத்தாள் – அரங்கேறிய விநோத சம்பவம்!
தமிழகத்தில் திருவள்ளூர் பல்கலைக்கழக தேர்வில், பழைய வினாத்தாள் வழங்கப்பட்ட சம்பவம் குறித்த விளக்கம் வெளியாகி இருக்கிறது.
வினாத்தாள் சம்பவம்
தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் திருவள்ளூர் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் வேலூர், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இருக்கின்றன. இந்நிலையில் இந்த பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தேர்வில் பழைய வினாத்தாள் அப்படியே தற்போதைய தேர்வுக்கு வழங்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
இந்திய கடலோர காவல் படையில் மீனவ இளைஞர்கள் சேர்ப்பு – ஆளுநர் பேச்சு!
இந்நிலையில் இதற்கு காரணம், வினாத்தாள் தயாரிப்பாளருக்கு புதிய பாடத்திட்டத்தை வழங்காததே என தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில் திருவள்ளூர் பல்கலைக்கழக துணை வேந்தர் முனைவர் ஆறுமுகம் கூறுகையில், வினாத்தாள் தயாரித்த பேராசிரியர் இனி வாழ்நாளில் பல்கலைக்கழகத்திற்கு வினாத்தாள் தயாரிக்காதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.