இந்திய கடலோர காவல் படையில் மீனவ இளைஞர்கள் சேர்ப்பு – ஆளுநர் பேச்சு!
இந்தியாவில் கடலோர காவல் படையில் மீனவ இளைஞர்களை சேர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக ஆளுநர் தெரிவித்துள்ளனர்.
அரசு நடவடிக்கை
இந்தியாவில் கடலோர காவல் படை, 1977ஆம் ஆண்டு பிப். 1 ஆம் தேதி தொடங்கப்பட்டது. உலகிலேயே 4வது பெரிய கடலோர காவல் படையாக இது இருக்கிறது. இந்திய கடல் எல்லை பகுதியில் பாதுகாப்பு, மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் கடலோர காவல் படையில் ஆட்கள் சேர்ப்பது குறித்து ஆளுநர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் நவ.24 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
அதாவது கடலோர காவல் படையில் மீனவ இளைஞர்களை சேர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார் . மேலும் மத்திய அரசு பணிகளான ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகளுக்கு மீனவர்கள் வர வேண்டும் என உலக மீனவர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் நடைபெற்ற விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பேசி இருக்கிறார்.