தமிழ் புத்தாண்டை சித்திரை மாதம் ஏன் கொண்டாடுகிறீர்கள்? முழு விவரம் உள்ளே!
தமிழகத்தில் சித்திரை மாதம் முதல் நாள் அன்று ஒவ்வொரு ஆண்டும் தமிழ் வருடப்பிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு என்ன காரணம் என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.
தமிழ் புத்தாண்டு
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் முதல் நாள் தமிழ் வருடப்பிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு சூரியன் மேஷ ராசியில் சஞ்சரிக்கத் தொடங்குவதே முக்கிய காரணமாகும். மேலும் தமிழகம் மற்றும் கேரளாவில் சூரியனின் நகர்வை அடிப்படையாக கொண்டு தமிழ் மாதப்பிறப்புகள் கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது.
Smart phone பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ்.. வந்தாச்சு Android 14..கூகுளின் நியூ அப்டேட்!
Follow our Instagram for more Latest Updates
அந்த வகையில் சூரியன் மேஷ ராசியில் சஞ்சரித்து கிழக்கு திசையில் நகர தொடங்குகிறது. இதையடுத்து கர்நாடகா, ஆந்திராவில் சந்திரனை அடிப்படையாக கொண்டு மாதங்கள் கணக்கிடப்படுகிறது. மேலும் வடநாட்டில் தமிழ் வருடப்பிறப்பை பைசாகி என்றும், மேஷ சங்கராந்தி என்றும் கொண்டாடுகின்றனர். இதே போன்று கேரளத்தில் விஷூ என்ற பெயரில் கொண்டாடி வருகின்றனர்.
இந்த தமிழ் வருடப்பிறப்பன்று தங்களின் குல தெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும் என்பது ஐதீகம்.