BEL நிறுவனத்தில் Degree முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!
BEL என்னும் Bharat Electronics Limited ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை சில நாட்களுக்கு முன் வெளியிட்டது. இந்த அறிவிப்பில் Trainee Officer – I, Project Officer – I, Security Officer ஆகிய பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் (15.04.2023) முடிய உள்ளதால் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
BEL நிறுவன வேலைவாய்ப்பு குறித்த விவரங்கள்:
தற்போது வெளியான அறிவிப்பின் மூலம் BEL, நிறுவனத்தில் Trainee Officer – I, Project Officer – I, Security Officer ஆகிய பணிகளுக்கு என மொத்தமாக 05 பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிய முடிகிறது. இப்பணிகளுக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி வாரியங்களில் Graduate Degree, MA, Post Graduate Degree முடித்த நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. மேலும் Project Officer – I பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 02 ஆண்டுகள் அனுபவம் உள்ளவராகவும் இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
HDB Financial-ல் Degree தேர்ச்சி பெற்றவர்களுக்கான சூப்பர் வேலைவாய்ப்பு – நேர்காணல் மூலம் தேர்வு!
இந்த மத்திய அரசு சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பு 28 வயது முதல் 32 வயது வரை என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் OBC (NCL) விண்ணப்பதாரர்களுக்கு 03 ஆண்டுகள் வயது தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு தகுதியான நபர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்பட உள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.30,000/- முதல் ரூ.1,40,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்களிடம் Trainee Officer – I பணிக்கு ரூ.177/-, Project Officer – I பணிக்கு ரூ.472/- மற்றும் Security Officer பணிக்கு ரூ.708/- விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படும். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இப்பணிகளுக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 15.04.2023 என்பது இப்பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.