மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்த மு.க.ஸ்டாலின்..!! ” காரணம் இதுதானா”…!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிகளுக்கு மத்திய அரசு நிதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்த நிலையில், கடந்த அக்டோபர் 6ம் தேதியன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து 65% வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்., இந்த தேதியில் தான்?? வெளியான முக்கிய தகவல்!!!
அதனைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டாருடன், தமிழக முதல்வர் இன்று ஆலோசனை மேற்கொண்டார். அப்போது தமிழக முதல்வர் கூறியதாவது, ” மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கி தந்த மத்திய அரசுக்கு நன்றி, பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறித்தியுள்ளேன். மேலும், நிர்ணயிக்கப்பட்ட கால கேடுக்குள் பணிகளை முடிக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்” என்று கூறினார்.


























