கடந்த கல்வியாண்டின் இறுதி தேர்வுகள் பள்ளி மாணவர்களுக்கு நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது கோடை கால விடுமுறை தொடங்கியுள்ளது.
கோடை விடுமுறை:
2023 – 24ஆம் கல்வியாண்டில் 10, 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் முடிவடைந்த பின்னர் மற்ற வகுப்பு மாணவர்களுக்கான இறுதித் தேர்வுகளும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாணவர்களுக்கு கோடை கால விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. வட மாநிலங்களிலும் கோடைகால விடுமுறை தொடங்கியுள்ள நிலையில் மாணவர்களுக்கு மட்டுமே விடுமுறை அறிவிப்பு பொருந்தும் என்றும், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு பள்ளிகள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC 2024 பொதுத்தமிழ் எப்படி படிக்கலாம்!!என்னென்ன படிக்கலாம் !!! இந்த வீடியோ பாருங்க !!
தமிழகத்தில் ஏப்ரல் 24ஆம் தேதி முதல் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு கோடைகால விடுமுறை தொடங்கியுள்ளது. குறிப்பாக ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தின் தொடக்கத்தில் பள்ளிகளில் புதிய கல்வி ஆண்டு தொடங்கப்படும். ஆனால் கோடைகால வெப்பம் அதிக அளவில் தாக்கி வருவதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஜூன் மாதத்தின் இரண்டாம் வாரத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.