நடக்குமா கோபி- ராதிகா திருமணம்? நிறுத்த போகும் அந்த நபர் யார்? சீரியலில் வர போகும் திடீர் திருப்பம்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி ராதிகா திருமணம் நடக்குமா? யார் வந்து நிறுத்துவார்? என்ற எதிர்பார்ப்புடன் கதை சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் நாளைய எபிசோடில் நடக்க இருக்கும் ட்விஸ்ட் குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியலில் கோபி பாக்கியாவின் குடும்ப வாழ்க்கையை பற்றியே கதை சென்று கொண்டிருக்கிறது. இத்தனை நாள் குடும்பத்தை கோபி ஏமாற்றி வந்த நிலையில் தற்போது அவர் ராதிகாவை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார். முந்தைய நாள் ரிசப்ஷன் நடந்து முடிய, அதில் பாக்கியா தான் சமைக்கிறார். முதலில் இது கோபி கல்யாணம் என தெரியாமல் இருக்க மயூ மூலமாக பாக்கியாவிற்கு உண்மை தெரிய வருகிறது.
ஆனால் பாக்கியா கண்டுகொள்ளாமல் இருக்கிறார். இதற்கிடையே ராமமூர்த்தி வந்து கோபியை கண்டபடி திட்ட, ராமமூர்த்தியை தள்ளி விட்டு கோபி எனக்கு ராதிகா தான் முக்கியம் என சொல்கிறார். கோபி வீட்டில் இருந்து யாரவது ஒருவர் வந்து பிரச்சனை செய்வார்களோ என நினைத்து ராதிகா வருத்தப்படுகிறார், ஆனால் கோபி என்ன நடந்தாலும் நான் உனக்கு துணையாக இருப்பேன் என ஆறுதல் சொல்கிறார். மறுபக்கம் ராமமூர்த்தியை காணாமல் எழில் போன் செய்கிறார்.
IT ஊழியர்களே உஷார்! இதை மட்டும் செய்யாதீங்க.. கண்காணிக்கும் நிறுவனங்கள்!
Exams Daily Mobile App Download
நான் இந்த மண்டபத்தில் இருப்பதாக ராமமூர்த்தி சொல்ல, உடனே செழியனும் எழிலும் கிளம்பி வருகின்றனர். அவர்களிடம் ராமமூர்த்தி திருமணத்தை நிறுத்த வேண்டும் என சொல்ல, என்ன செய்வது என தெரியாமல் அவர்கள் போலீசில் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் கோபி ராதிகா திருமணம் தெரிந்து ராஜேஷ் வேறு பிரச்சனை செய்ய வருகிறார். இப்படி அடுத்து அடுத்து பிரச்சனைக்கு மேல் பிரச்சனை வருவதால் கோபி ராதிகா மிகவும் வருத்தத்தில் இருக்கின்றனர். இதெல்லாம் அடுத்து வரும் எபிசோடில் வர இருக்கிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்