தமிழக அரசு ஊழியர்களுக்கு 7 நாட்கள் வரை சிறப்பு தற்செயல் விடுப்பு – அரசாணை வெளியீடு!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு 7 நாட்கள் வரை சிறப்பு தற்செயல் விடுப்பு - அரசாணை வெளியீடு!
தமிழக அரசு ஊழியர்களுக்கு 7 நாட்கள் வரை சிறப்பு தற்செயல் விடுப்பு - அரசாணை வெளியீடு!
தமிழக அரசு ஊழியர்களுக்கு 7 நாட்கள் வரை சிறப்பு தற்செயல் விடுப்பு – அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் கொரோனா கால கட்டத்திலும் அலுவலகத்திற்கு சென்று பணி செய்ததால் ஏராளமானோர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்தனர். அதனால் அரசு ஊழியர்களுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது அரசு ஊழியரின் மனைவி கருத்தடை அறுவை சிகிச்சை செய்தால் அவர்களுக்கு முக்கிய அறிவிப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது.

சிறப்பு தற்செயல் விடுப்பு

தமிழகத்தில் கொரோனா கால கட்டத்தில் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதனால் தனியார் ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியே பணி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டார்கள். ஆனால் அரசு ஊழியர்கள் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ள சூழ்நிலையில் கூட அலுவலகத்திற்கு நேரில் சென்று பணியில் ஈடுபட்டார்கள். இதனால் ஏராளமான அரசு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அத்துடன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி ஏராளமான ஊழியர்கள் உயிரிழந்தனர். இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இங்கிலாந்து, ஜெர்மனியில் செவிலியர்களுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

அத்துடன் திமுக தனது வாக்குறுதியில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி தரப்படும் என்று அறிவித்திருந்தது. அதன்படி அவர்களுக்கு 31% அகவிலைப்படி வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து கொரோனாவால் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு 7 முதல் 14 நாட்கள் வரை சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கப்பட்டது. மேலும் கொரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களில் வசிக்கும் ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியே பணிபுரியலாம் என்றும் அரசு அறிவித்தது. அத்துடன் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் கொரோனா சிகிச்சை பெற்றதற்கான சான்றிதழை சமர்ப்பித்தும் சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்.

இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பாக பெண் அரசு ஊழியர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டால் அவர்களுக்கு 21 நாட்கள் வரை சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்து கொள்ளலாம் என்று அரசு அனுமதி அளித்துள்ளது. இதனை தொடர்ந்து இது போன்று மற்றொரு அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதில் தெரிவித்தாவது, தற்போது அரசு ஊழியரின் மனைவி கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொண்டால் அந்த அரசு ஊழியருக்கு அதிகபட்சமாக 7 நாட்கள் வரை சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!