இங்கிலாந்து, ஜெர்மனியில் செவிலியர்களுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்புகளை அரசு உருவாக்கி வருகிறது. இதனை தொடர்ந்து தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன நிர்வாக இயக்குநர் சி.என்.மகேஸ்வரன் செவிலியர் பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதிகளை பற்றி விரிவாக பார்ப்போம்.
வேலைவாய்ப்பு:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதனால் பெரும்பாலானோர் தங்களின் வேலைகளை இழந்தனர். அத்துடன் அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டதால் வேலைவாய்ப்பை உருவாக்கி தர முடியாத நிலை இருந்தது. தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறது. இதனை தொடர்ந்து செவிலியர் பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன நிர்வாக இயக்குநர் சி.என்.மகேஸ்வரன் வெளியிட்டுள்ளார். இதில் தெரிவித்தாவது, ஜெர்மனி நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் செவிலியர் பணியிடத்தில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரைநாள் மட்டுமே பள்ளிகள் திறப்பு – நேரத்தை மாற்ற ஆசிரியர்கள் கோரிக்கை!
இதற்கு விண்ணப்பிக்க நர்சிங் படிப்பில் டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். அத்துடன் ஏ-1, ஏ-2, பி-2 நிலையில் ஜெர்மன் மொழி தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் குறைந்தபட்சமாக 1 வருட பணி அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். இவர்களுக்கு மாத சம்பளமாக ரூ.1.5 லட்சம் வரை வழங்கப்படும். இதில் பி 2 நிலையில் ஜெர்மன் மொழி தேர்ச்சி பெற்றவராக இருப்பின் அவர்களுக்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.2.5 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இதே போன்று இங்கிலாந்து நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் செவிலியர் பணியிடத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இப்பணிக்கு ஆண்களும், பெண்களும் விண்ணப்பிக்கலாம். இதற்கு நர்சிங் படிப்பில் டிப்ளமோ அல்லது பட்டம் மற்றும், ஐிஇஎல்டிஎஸ், ஓஇடி தேர்வில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். அத்துடன் குறைந்தபட்சமாக 6 மாத கால பணி அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். இவர்களுக்கு மாத சம்பளமாக ரூ.2 லட்சம் வரை வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க தங்களின் சுயவிவரக்குறிப்பு, கல்வித்தகுதி, அனுபவம், பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களின் நகல்கள் மற்றும் வெள்ளை நிற பின்னணியில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் இணைத்து [email protected] என்ற என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால் இதற்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் விரைவில் விண்ணப்பிக்க வேண்டும்.