தமிழகத்தில் மின் இணைப்பு பெயர் மாற்ற சிறப்பு முகாம் – செப்.25 வரை நீட்டிப்பு!

0
தமிழகத்தில் மின் இணைப்பு பெயர் மாற்ற சிறப்பு முகாம் – செப்.25 வரை நீட்டிப்பு!
தமிழகத்தில் மின் இணைப்பு பெயர் மாற்ற சிறப்பு முகாம் – செப்.25 வரை நீட்டிப்பு!
தமிழகத்தில் மின் இணைப்பு பெயர் மாற்ற சிறப்பு முகாம் – செப்.25 வரை நீட்டிப்பு!

தமிழகத்தில் வீட்டு மின் இணைப்பை ஒருவர் பெயரில் இருந்து வேறு ஒருவர் பெயருக்கு மாற்ற சிறப்பு முகாம் நடைபெற்று வரும் நிலையில் அது செப். 25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு முகாம்:

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் படி, வீட்டு பிரிவு நுகர்வோர் ஒருவர் பெயரில் உள்ள மின் இணைப்பை வேறு ஒருவர் பெயருக்கு மாற்ற செய்யவும், மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்யும்போது, பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை நீக்க, கட்டணம் செலுத்திய அன்றே பெயர் மாற்றம் வழங்க, சிறப்பு முகாம் ஜூலை 24ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

நாட்டில் பள்ளி மாணவர் முதலாம் வகுப்பு சேர்க்கை வயது 6 ஆக உயர்வு – புதிய கல்வி கொள்கை அமல்!

இந்த முகாம் ஞாயிற்றுகிழமை மற்றும் பண்டிகை தினங்கள் தவிர அனைத்து அலுவலக வேலை நாட்களிலும் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 வரை நடைபெறும். இந்த முகாம் மூலம் தற்போது வரை 1.08 லட்சம் பேருக்கு மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த முகாம் ஆகஸ்ட் 25 வரை மட்டுமே நடைபெறும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது செப்.25 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

Exams Daily Mobile App Download

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!