நாட்டில் பள்ளி மாணவர் முதலாம் வகுப்பு சேர்க்கை வயது 6 ஆக உயர்வு – புதிய கல்வி கொள்கை அமல்!
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் படி முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கையில் மாணவர்களுக்கான வயதானது ஆறாக உயர்த்தப்பட்டுள்ளது.
புதிய கல்வி கொள்கை:
மத்திய அரசு 2020 ஆம் ஆண்டு நாட்டில் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கான உத்தரவை வெளியிட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கையின் பல்வேறு அம்சங்கள் மக்களிடையில் வரவேற்பு பெற்றது. இந்நிலையில் நாட்டில் முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான வயது புதிய கல்விக் கொள்கையின்படி ஆறு ஆக உயர்த்தப்பட்டுள்ளது. குழந்தைகள் தனது ஆறாவது வயது முதல் அறிவாற்றல் மற்றும சமூக வளர்ச்சியின் ஒரு புதிய கட்டத்தில் நுழைவதாகவும் இது மாணவர்களுக்கான சரியான பருவம் என்றும் 90% மூளை ஆறு வயதுக்குள் வளர்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் சதுர அடி நிலம் ரூ.1000 நிர்ணயம் – பதிவுத்துறை வெளியிட்ட அப்டேட்!
மேலும் இதன் மூலம் வரும் ஆண்டுகளில் மாணவர்கள் இடைநிற்றல் விகிதம் குறையும் என்றும், மாணவர்கள் மற்றவர்களுடன் பழகுவதற்கு சரியான பருவமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய கல்வி கொள்கையின் படி இனி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.