பள்ளிகளில் கோடை விடுமுறை மேலும் 11 நாட்கள் நீட்டிப்பு – மாநில அரசு அதிரடி அறிவிப்பு!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் கவுன்சில் பள்ளிகள் உட்பட அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் கோடை விடுமுறை மேலும் 11 நாட்கள் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
கோடை விடுமுறை:
நாடு முழுவதும் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் வெயில் அதிகமாக இருப்பதால் பல மாநிலங்களில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் உத்திரபிரதேசம் மாநிலத்தில் கோடை விடுமுறை மேலும் 11 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இனி பள்ளிகள் ஜூன் 27 ஆம் தேதி தான் மீண்டும் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
மேலும் உலக யோகா தினம் ஜூன் 21 ஆம் தேதி என்பதால் அன்றைய தினம் பள்ளிகள் திறக்கப்பட்டு பள்ளியில் குழந்தைகளுக்கு யோகா பயிற்சிகள் நடத்தப்படும். பின்னர் இனிப்புகள், பழங்கள், சுத்தமான குடிநீர் வழங்கப்படும் எனவும் ஜூன் 20 ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட்டு மறுநாளுக்கு தேவையான தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படும்.
ATM கார்டு இல்லாமலேயே ATMல் இருந்து பணம் எடுக்கும் புதிய வசதி – பேங்க் ஆஃப் பரோடா வங்கி அறிமுகம்!
மேலும் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 27 ஆம் தேதி பள்ளிகள் திறப்பதற்கு முன் தூய்மை, குடிநீர், குழந்தைகளுக்கான இருக்கை வசதி, கழிவறைகளை சுத்தம் செய்தல் போன்றவற்றை சரியான முறையில் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என கல்வித்துறை செயலாளர் அறிவுறுத்தி இருக்கிறார்.